lundi 3 décembre 2012

ஏக்கம் நுாறு [பகுதி - 23]




ஏக்கம் நுாறு [பகுதி - 23]

கண்பட்டு மின்னுதடி கவிதைப் பூக்கள்!
     கை..பட்டு மின்னுதடி ஆசைப் பூக்கள்!
விண்பட்டு மின்னுதடி கனவுப் பூக்கள்!
     விரல்பட்டு மின்னுதடி விளைந்த பூக்கள்!
வெண்பட்டு மின்னுதடி நெய்த பூக்கள்!
     விரிகுழலில் மின்னுதடி விந்தைப் பூக்கள்!
தண்பட்டு மின்னுதடி நெஞ்சப் பூக்கள்!
     தண்டமிழ்போல் மின்னுதடி ஏக்கப் பூக்கள்!! 88

                                      (தொடரும்)

4 commentaires:

  1. வரிகளும் மின்னுகிறது ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மின்னும் அவளழகை மின்னும் தமிழ்தொடுத்து
      மின்னும் வலையில் விளைத்திட்டேன்! - மின்னுமே!
      கற்றுக் களிப்போர் கவிமனம்! யாப்பறிவைப்
      பெற்றுக் களிப்போர் பெயா்!

      Supprimer
  2. வணக்கம்.

    அனைத்துப் பட்டும் மின்னுகிறது புலவரே.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அணிமணி மின்னும்! அருந்தமிழ் மின்னும்!
      துணிமணி மின்னும் சுடா்ந்து - பனிமலா்
      மின்னும்! படா்புகழ் மின்னும்! அவள்எழில்
      மின்னும் கவியெனை வென்று!

      Supprimer