Affichage des articles dont le libellé est யானை ஓவியக்கவிதை. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est யானை ஓவியக்கவிதை. Afficher tous les articles

samedi 9 novembre 2019

யானை ஓவியக்கவிதை



யானை ஓவியக்கவிதை
  
யானை முகத்தானை நாடு!
வஞ்சி விருத்தம்
[தேமாங்காய்+தேமா+கூவிளம்]
  
கோ..மேவு கோ..நா மேவுமே!
நே..மேவு தீவு மேவுமே!
பா..மேவு மே!கா மேவுமே!
நீ..மேவு யானை நாதனை!
  
அருங்சொற்பொருள்
  
கோ - பூமி, தலைமை, மேன்மை
மேவுதல் - அடைதல், விரும்புதல், ஓதுதல், அமர்தல், பொருந்துதல்,
நா - நாக்கு, சொல்
நே - அன்பு
தீவு - சுவை
பா - பாட்டு
கா - சோலை
யானைநாதன் - பிள்ளையார்
  
கருத்துரை
  
யானை முகத்தலைவனை அடைந்து போற்றித் தொழுதால், பூமியில் வாழும் மக்களை வாழ்விக்கும் நல்லுரை வழங்கும் தலைவனின் நாவைப் பெறலாம், அன்பை அடையலாம். சுவையை அடையலாம். பாடுகின்ற புலமையைப் அடையலாம். பாக்களில் சோலை பொருந்துமே.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
07.11.2019