samedi 22 décembre 2012

புதியதோர் உலகம் |பகுதி - 6]



புதியதோர் உலகம் செய்க!

வீட்டுக் குள்ளே பெண்மணியைப்
    பூட்டி வைத்தால் உயா்வேது?
பாட்டுக் குள்ளே பாரதியும்
    பழமை ஒழிய நெருப்பிட்டான்!
காட்டுக் குள்ளே வாழ்விலங்கு
    நாட்டுக் குள்ளே உலவுவதோ?
கோட்டுக் குள்ளே புத்துலகைக்
    கோலக் கண்ணா அமைத்திடுக!

வடலுார் வள்ளல் வடித்திட்ட
    வல்ல மார்க்கம் மணக்கட்டும்!
உடலுார் உணா்வில் உயிர்க்கருணை
    ஓங்கி ஒளியை ஏற்றட்டும்!
கடலுார் மீன்போல் மொழிக்கடலில்
    கவிஞா் நெஞ்சம் களிக்கட்டும்!
மடலுார் மணமாய்ப் புத்துலகை
    மாய கண்ணா அமைத்திடுக!

(தொடரும்)

Aucun commentaire:

Enregistrer un commentaire