Affichage des articles dont le libellé est பத்துச்சொல் எழிலணி வெண்பா. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est பத்துச்சொல் எழிலணி வெண்பா. Afficher tous les articles

samedi 11 avril 2020

பத்துச்சொல் எழிலணி வெண்பா!


வெண்பா மேடை - 165
  
பத்துச்சொல் எழிலணி வெண்பா!
  
பத்து வினாக்களுக்கு ஒரு விடை வரும்படியாகப் பாடுவது பத்துச்சொல் எழிலணி வெண்பாவாகும்.
  
பொய்யுரையும், சேர்தளையும், புண்ணோயும், நல்வன்மை
மெய்யுரையும், சேர்வினையும், மேவரணும், - உய்விடமும்
மூடுதலும், பந்தியும், மூட்டையும்,காண் பேரென்ன?
கூடுதலும் 'கட்டு'எனக் கூறு!
  
வெண்பாவில் வந்த பத்து வினாக்களுக்குக் 'கட்டு' என்ற ஒரு விடை வந்தது.
  
1. பொய்யுரை - பொய்யாகக் கதையைக் கட்டிச் சொல்லுதல்
2. தளை - இணைத்தல், சேர்தல் [கட்டுதல்]
3. நோய் - பிணி [கட்டு]
4. வன்மை மெய்யுரை - உடவுறுதி [ உடற்கட்டு]
5. சேர்வினை - தழுவுதல், மணஞ்செய்தல், [கட்டி அணைத்தல்]
6. மேவு அரண் - அணை, காவல் [கட்டு]
7. உய்விடம் - வீட்டின் பகுதி [ சமையற்கட்டு]
8. மூடுதல் - கடையைக் கட்டு
9. பந்தி - ஒழுங்கு [கட்டுப்பாடு]
10. மூட்டை - கட்டு
  
இவ்வாறு பத்துச்சொல் எழிலணி வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
11.04.2020