lundi 16 septembre 2019

கம்பன் விழா அழைப்பிதழ் 2019







தேருலா

பிரான்சு கம்பன் கழகம் நடத்தும்
18 ஆம் ஆண்டு
கம்பன் விழாவில் வெளியிடப்படும்
சித்திர கவி நுாலின் முகப்பட்டை

dimanche 8 septembre 2019

கம்பன் விழா 2019


நாள்
  
22.09.2019 ஞாயிற்றுக் கிழமை
  
இடம்
  
Le Gymnase Victor Hugo
rue Renoir
95140 Garges les Gonesse
France
  
அனைவரும் வருகவே! அருந்தமிழ் பருகவே!

vendredi 6 septembre 2019

வெண்பா மேடை - 142


வெண்பா மேடை - 142
  
44 எழுத்துக்களில் அமைந்த நேரிசை வெண்பா
  
தமிழே! அமுதே! தகைமிகு தாயே!
குமுதே! குணமிகு மாதே! - இமையென
நீயே இரு!எனை நீடு பெறவே..கா!
வேயே இசைய விளை!
  
ஒற்றே இன்றி இவ்வெண்பா அமையவேண்டும். வெண்பாவின் தொடக்கம் நிரையசையில் அமையவேண்டும். கூவிளங்காய் வரக்கூடாது. ஒரு நெடிலெழுத்தும் அல்லது இரு குறிலெழுத்தும் ஈற்றில் வாய்பாட்டில் வரலாம். இவ்வகையில் அமையும் வெண்பா 44 எழுத்துக்களைப் பெறும்.
  
43 எழுத்துக்களில் அமைந்த நேரிசை வெண்பா
  
மாயவா! மாதவா! மாமரை மாதுறை
துாயவா! நுாலே சுடர..வா! - தாயவா!
தேனே யருள..வா! தேரே யமர..வா!
வானே விடியவே வா!
  
நேரசையில் தொடங்கும் இவ்வெண்பா 43 எழுத்துக்களைப் பெற்றுள்ளதைக் காண்க. நேரசையில் தொடங்கும் இவ்வெண்பாவில் விளங்காய் வரக்கூடாது. ஒரு நெடிலெழுத்தை அல்லது இரு குறிலெழுத்தை ஈற்று வாய்பாடு ஏற்கும்.
  
43 எழுத்துக்களுக்குக் குறைவாக வெண்பா அமையாது என்பதை உணரலாம்.
  
விரும்பிய பொருளில் 44 எழுத்துக்களில் அமைந்த வெண்பாவும், 43 எழுத்துக்களைப் பெற்ற வெண்பாவும் பாடுக.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து கவெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
06.09.2019

வெண்பா மேடை 141


வெண்பா மேடை - 141

26 எழுத்துக்களில் அமைந்த குறள்
  
வா..தமிழே! பாவளமே தா..தமிழே! நானுயர
மா..தமிழே! நீ..பொழிக வாகு!
  
ஒற்றே இன்றி இக்குறள் அமையவேண்டும். ஈற்றுச் சீரைத் தவிர மற்றச் சீர்கள் கூவிளங்காயாக வரவேண்டும்! ஈற்றுச்சீர் 'காசு' என்ற வாய்பாட்டில் அமையவேண்டும். இவ்வகையில் அமையும் குறள் 26 எழுத்துக்களைப் பெறும்.
  
25 எழுத்துக்களில் அமைந்த குறள்
  
நிறைதமிழே! நானுயர நீயருள வா..வா!
இறைமொழிழே! ஈடிணையே ஏது?
  
நிரையசையில் தொடங்கும் இக்குறள் 25 எழுத்துக்களைப் பெற்றுள்ளதைக் காண்க. அடியின் தொடக்கத்தில் கருவிளங்காயும், 2, 3, 6 ஆகிய இடங்களில் கூவிளங்காயும், நான்காம் சீர் தேமாவாகவும், ஈற்றுச்சீர் 'காசு' என்ற வாய்பாட்டிலும் அமைந்தன.
  
இக்குறளில் ஒற்றுகள் சேரச் சேர எழுத்தெண்ணிக்கை கூடும்.
  
விரும்பிய பொருளில் 26 எழுத்துக்களில் அமைந்த குறளும், 25 எழுத்துக்களைப் பெற்ற குறளும் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து குறள்வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
06.09.2019

வெண்பா மேடை - 140   


வெண்பா மேடை - 140
  
19 எழுத்துக்களில் அமைந்த குறள்
  
தாயே! தகைமை தருவாயே! தாதூரே!
வாயே மணமுற வா!
 
விரும்பிய பொருளில் 19 எழுத்துக்களில் அமைந்த குறள் வெண்பா ஒன்றினைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்

இக்குறளில் ஒற்றும் விளங்காயும் வாரா. நேரில் தொடங்கினால் 19 எழுத்துக்களை நிரையில் தொடங்கினால் 20 எழுத்துக்களை இக்குறள் பெறும்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து குறள்வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தலைவர்
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
05.09.2019

வெண்பா மேடை - 139



வெண்பா மேடை - 139
  
இருபது எழுத்துக்களில் அமைந்த குறள்
  
திருவே! அமுத வுருவே! இனிய
குருவே! தமிழே கொடு!
 
விரும்பிய பொருளில் இருபது எழுத்துக்களில் அமைந்த குறள் வெண்பா ஒன்றினைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து குறள்வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தலைவர்
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
05.09.2019

mercredi 4 septembre 2019

கம்பன் விழா 2019



கம்பன் கழகம் பிரான்சு நடத்தும்
பதினெட்டாம் ஆண்டு
தெய்வமாக்கவி
கம்பன் விழா

நாள்
21.09.2019 சனிக்கிழமை
22.09.2019 ஞாயிற்றுக் கிழமை

இடம்

Le Gymnase Victor Hugo
rue Renoir
95140 Garges les Gonesse
France          

அனைவரும் வருகவே! அருந்தமிழ் பருகவே!

தமிழ்த்திருமணம்





நம்முடைய பயிலரங்கப் பாவலர் நெய்தல் நாடன் அவர்களுக்கும் திருமிகு அபராசிதா அவர்களுக்கும் 01.09.2019 அன்று பிரான்சில் தமிழ்த் திருமுறை நெறியில் திருமணம் நடைபெற்றது. திருமுறைப் பாடல்களை ஓதி அடியோன் இத்திருமணத்தை நடத்திவைத்தேன். என்றன் தலைமாணாக்கர் பாவலர் கவிப்பாவையும், பாவலர் மணியன் செல்வியும் எனக்குத் துணையாக இருந்து திருமணத்தை நடத்திவைத்தனர்.
  
மணமக்கள்
குகதாசனும் அபராசிதாவும்
தமிழாக வாழியவே!
  
நேரிசை வெண்பா
  
நம்பி குகதாசன் நங்கை அபராசிதா
அம்மி படைத்தே அருந்ததியைக் - கும்மிட்டே
இல்லறம் ஏற்றார்! இனிய தமிழ்மணக்கும்
சொல்லறம் ஏற்றார் சுவைத்து!
  
வியப்பகவல்
  
பூமணங் காணும் பாமண அன்பர்!
காமண வாழ்வில் களிக்கச் சேர்ந்தார்!
இல்லறம் ஏற்கும் இன்மண மக்கள்
நல்லறம் யாவும் நலமுறக் கொள்க!
அருங்குக தாசனும் அபராசிதாவும்
பெருங்குணப் பேறுகள் பெற்று வாழ்க!
தங்க மாட்சி தழைத்து வெல்க!
பொங்கும் புகழே மின்னச் செய்க!
அன்பே அகமா ழாட்சி கொண்டு
கன்னல் கவிகள் கமழக் காண்க!
வண்ண நலமும் வாழை வளமும்
எண்ணம் தேனா ழினிப்பும் பெறுக!
அறமே உயிரா யணைத்துக் காக்கும்
திறமே திகழ்க! வேண்டும் வரங்கள்
மேவ வேண்டும்! காதல் குயில்கள்
கூவ வேண்டும்! கொஞ்சும் செல்வம்
நெஞ்சம் நிறைந்து நெகிழ வேண்டும்!
தஞ்சம் தமிழே! தவமாம் குறளே!
பாட்டின் அரசன் கூட்டிய கவிதை
சூட்டும் நெறியைச் சுவைத்து வாழ்கவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம், பிரான்சு
தலைவர்
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
01.09.2019