சிவலிங்க ஓவியக் கவிதை - 3
[பாடல் 143 எழுத்து, ஓவியம் 128 எழுத்து]
என்னாசிரியர்
அந்தாதி அரசர் பா.சு. அரியபுத்தரனார்
செழிப்பை யருள்கவே!
விந்தைத் தமிழை வேண்டித் தொழுதார்!
சிந்தை யினிக்கத் தேன்கவி வடித்தார்!
நாள்கள் யாவும் நலமே பெருகத்
தாள்கள் துாய வழியை யன்பையே
நாடிப் பொழிலே செல்ல, நெஞ்ச
மோடி மேவு முயர்வை! வாழ்வு
மேன்மை யூட்டும்! நாட்டும் வெற்றியை!
கோன்மை நல்கி மேலாங் கோலிடும்!
பேரார் சற்குரு பாரெலாம் வாழ்த்தவே
சீரெலாம் மேவுஞ் செழிப்பை யருள்கவே!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
24.07.2019
