lundi 17 décembre 2012

புதியதோர் உலகம் [பகுதி - 1]




புதியதோர் உலகைச் செய்க!

புத்தா் பொழிந்த பொன்மொழிகள்
    பூத்து மணக்க! நெஞ்சத்துள்
சித்தா் ஞான மலா்க்காடு
    செழித்து மணக்க! எந்நாளும்
எத்தா்! பித்தா் இல்லாமல்
    இயற்கை மணக்க! பேரழகா!
அத்தா! அரங்கா! புத்துலகை
    அன்பில் மணக்க அமைத்திடுக!

(தொடரும்)

5 commentaires:

  1. நல்லது அய்யா....!
    நல்லா இருக்கு...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மிக்க நன்றி!

      எல்லா வளமும் இருக்கின்ற புத்துலகைச்
      சொல்லச் சுவைப்பீா் தொடா்ந்து!

      Supprimer
  2. Réponses

    1. வணக்கம்!

      நனி நன்றி!

      அழகான செந்தமிழை என்னகம் எண்ணப்
      பழமாக முற்றிவரும் பாட்டு!

      Supprimer
  3. வன்மம் நிறைந்து வளரும் உலகு
    அன்பில் நிறைவது அற்புதம்! அமையட்டும்!-
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer