Affichage des articles dont le libellé est கண்ணன் கவிதைகள். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est கண்ணன் கவிதைகள். Afficher tous les articles

mercredi 16 septembre 2020

கண்ணன்... மணிவண்ணன்...

 


கண்ணன்... மணிவண்ணன்...
  
எனையாளும் வில்லழகன் - தொன்மை
இசையாளும் சொல்லழகன்!
மனையாளும் நல்லழகன் - முன்னை
மறையாளும் மல்லழகன்!
      கண்ணன்... மணிவண்ணன்...
  
திருமலையில் வாழ்ந்திடுவான் - தண்மை
தருமலையில் ஆழ்ந்திடுவான்!
அருங்கலையில் சூழ்ந்திடுவான் - உண்மைப்
பெருநிலையில் சேர்ந்திடுவான்!
      கண்ணன்... மணிவண்ணன்...
  
புள்ளமர்ந்து வந்திடுவான் - ஞானப்

பொன்னளந்து தந்திடுவான்!
உள்ளமர்ந்து மின்னிடுவான் - வான
உறவளந்து பின்னிடுவான்!
      கண்ணன்... மணிவண்ணன்...
  
பண்ணளந்து மீட்டிடுவான் - இந்தப்
பாரளந்து காட்டிடுவான்!
பண்பளந்து ஊட்டிடுவான் - வந்த
பகையளந்து ஓட்டிடுவான்!
      கண்ணன்... மணிவண்ணன்...
  
வீடருளும் ஓரரசன் - தங்கும்
பீடருளும் பேரரசன்!
ஏடருளும் சீரரசன் - பொங்கும்
இனிப்பருளும் தேரரசன்!
      கண்ணன்... மணிவண்ணன்...
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
14.09.2020


dimanche 2 juin 2019

படமும் பாட்டும்


படமும் பாட்டும்
  
நெடியவனை நீள்விழியால் அளந்தாள்!
  
வன்னுரலில்
கட்டுண்டான் அன்று!
மென்விரலில்
கட்டுண்டான் இன்று!
  
தலைமை உற்றவன்!
மயக்கும்
தலை.. மை.. உற்றவன்!
  
மாலை மடக்க
மாலை தொடுத்தாள்!
  
கண்ணனின் கைகளைக்
கட்டினாள்!
கண்களை????
  
ஓங்கிய உத்தமனை
ஏங்கிய நேரிழையாள்
வீங்கிய நீள்விழியால்
அளக்கின்றாள்!
  
விழிகள் முட்டின!
நன்றே ஒட்டின!
கவிகள் கட்டின!
  
சீதையின் பார்வை
போதையை ஊட்டும்!
இராமனின் பார்வை
இளமையை வாட்டும்!
  
கண்கள் புரிந்தன
கமழ்..வாய் வினையை!
வாய்கள் புரிந்தன
கருங்கண் வினையை!
  
வில்லேந்தும் வீரன்
விழியேந்தி நிற்கின்றான்!
சொல்லேந்தும் கோதையிடம்
கொக்குமொழி கற்கின்றான்!
  
மலையழகு தோளழகு!
மலையழகு மார்பழகு!
வென்றது எதுவோ?
  
சிலையழகுச் செல்வன்
சிலையழகுச் செல்வி
கலையழகு கொண்டார்!
கவியழகு கண்டார்!
  
நடையழகை, கொடையழகை
வென்றன
இடையழகும்! தொடையழகும்!
  
யுத்தப் படையழகை
வென்றது
முத்தக் கொடையழகு!
  
காலழகு - ஆம்..ஆம்
உலகம் - இந்தக்
கன்னியின் முன்னே
கால் அழகு!
  
தாளழகு - ஆம்..ஆம்
உலகம் - இந்தக்
கண்ணனின் முன்னே
தாள் அழகு!
  
வில்லை வளைப்பான்
என்றோ - அழகாய்
விரைந்து வளைந்தாள்!
எல்லை கடப்பான்
என்றோ - சரத்தால்
இறுகப் பிணைந்தாள்!
  
அடி முடி அறியா
அண்ணல்! - பூங்
கொடியின் - கைப்
பிடிகள் அறிந்தனவே!
  
கொஞ்சும் தமிழால்
குழைத்த கவிதை!
விஞ்சும் காதலை
விளைக்கும்!
கற்போர் மனத்தை
வளைக்கும்!
  
பாட்டழசர் கி. பாரதிதாசன்
02.06.2019

lundi 29 juillet 2013

முதலாய்.... முடிவாய்....



முதலாய் முடிவாய் இருப்பவனே!

உன்னை யன்றி எனக்குதவ
            உலகில் ஒருவன் இனியுண்டோ?
முன்னைச் செய்த வினைகளினால்
            முடியாத் துயரில் உழல்கின்றேன்!
பொன்னை நிகர்த்த மேனியனே!
            புல்லாங் குழலை இசைப்பவனே!
கண்ணைக் காக்கும் இமைபோலக்
            கண்ணா என்னைக் காப்பாயே!

படியா திருந்த நெஞ்சத்தைப்
            படியச் செய்யும் பரம்பொருளே!
அடியேன் வாழ்வில் கரையேறும்
            ஆற்றல் இன்றித் தவிக்கின்றேன்!
படியாய்க் கிடந்துன் கோயிலிலே
            பாவி யானும் கெஞ்சுகிறேன்!
முடியா தொன்றும் உனக்கில்லை
            முதலாய் முடிவாய் இருப்பவனே!

29.10.2000

dimanche 11 novembre 2012

கண்ணன் பதிற்றந்தாதி



கண்ணன் பதிற்றந்தாதி

நலந்தரும் சொல்லின் நயமெலாம் பாட
வலந்தரும் மாமணி வண்ணா! - குலந்தரும்
பூமகள் மின்னெஞ்சா! பூந்தமிழை நீ யென்றன்
நாமலர் மீதமர்ந்து நல்கு!

நல்லவர் தாழ்வதேன்? தீயவர் வாழ்வதேன்?
வல்ல விதியோன் வகுத்ததுவோ? - எல்லாம்
அறிந்தவனே! மண்ணை அளந்தவனே! என்னை
மறந்து விடாதே மனத்து!

மனமெனும் கூடத்துள் மாசகல, அன்பர்
இனமெனும் நற்பேர் எடுக்கத் - தனமிகு
மாமலை வாழும் மணிவண்ணா! போற்றியுனைப்
பாமாலை செய்தேன் பணிந்து!

பணிந்துனைப் போற்றிப் பரவ,என் நெஞ்சுள்
அணிந்துனைப் பாடிநலம் ஆள, - இனி,நான்
மறவா(து)  இருக்கவுனை மாமணி வண்ணா
உறவாய் எனைச்சூழ் உவந்து!

வந்துன் அடியை வணங்கும் அடியார்தம்
முந்தும் வினையை முடிப்பவனே! - செந்தமிழ்ப்
பாட்டில் களிப்பவனே! பாவலன் யான்எழுதும்
ஏட்டில் இருந்தருள்நற் றேன்.

தேனார் பொழில்சூழ் திருவரங்கை ஆண்டொளிர்
வானோர் தலைவா! மணிமார்பா! - நானோர்
பிழையினிச் செய்யாப் பெரும்புலமை எய்த
மழையாய்ப் பொழிகவே மாண்பு!

மாண்புறு சொல்லும், மணமுறு நற்செயலும்,
காணருந் தொண்டும், கனித்தமிழும் - வான்முகில்
வந்தொளிர் வேங்கட மன்னா! எனக்கிவை
தந்தருள் செய்வாய் தழைத்து!

தழைத்துயர் நன்னெறியும் தண்டமிழும் தந்தே
உழைத்துயர்ந் தோங்கவெனைச் செய்வாய்! - நுழையும்
துயரமெலாம் போக்கித் துணையருள் கண்ணா!
மயர்விலா வாழ்வை வழங்கு.

வழங்குமருள் வள்ளலே! வாழ்வை அறியா(து)
அழுந்துமெனை ஆட்கொண்(டு) அணைப்பாய் - முழங்கிடும்
என்மொழி யாவுமினி உன்புகழை! என்னெஞ்சுள்
பொன்னெறி ஈவாய் பொலிந்து.

பொலியும் திருச்சங்கும் பொற்சக் கரமும்
எளியோன் இருகைகள் ஏந்தி - மிளிருமுன்
தாளே சரணென ஆட்பட்டு நிற்கின்ற
நாளே பிறப்பின் நலம்!

கம்பன் இதழ் 15-02-2003

vendredi 9 novembre 2012

ஓங்கி அளந்த உத்தமன் பேர் பாடி.




ஓங்கி அளந்த உத்தமன் பேர் பாடி....

இரும்பைக் காய்ச்சும் இடத்தினிலே
     ஈக்கே என்ன வேலையடா?
கரும்பை நிகர்த்த கவிபடைக்கும்
     கவியின் நெஞ்சம் தோய்வதுவோ?
குரும்பைப் போன்று காய்வதுவோ?
     குன்றிக் குறுகி ஓய்வதுவோ?
உருவை நீட்டி இவ்வுலகை
     ஓங்கி யளந்த உத்தமனே!

ஊர்..ஊர்.. சுற்றி அலைந்தேனோ?
     உறவைக் கொன்று மகிழ்ந்தேனோ?
பார்..பார்.. இவனின் கொடுமைகளைப்
     பாவச் சுமையைச் சேர்த்தேனோ?
யார்..யார்.. குடியைக் கெடுத்தேனோ?
     நார்..நார்.. ஆகக் கிழித்தேனோ?
ஓர்..ஓர்.. அடியால் இவ்வுலகை
     ஓங்கி யளந்த உத்தமனே!

அம்மை அப்பன் செய்வினையோ?
     ஆன்மா கொணர்ந்த முன்வினையோ?
இம்மை சேர்த்த கொடுங்தீதோ?
     முன்னோர் எடுத்த பெரும்பழியோ?
பொம்மை யாக விதியேந்திப்
     போடும் ஆட்டம் போதுமடா?
செம்மை செய்க! இவ்வுலகைச்
     சீராய் அளந்த திருமாலே!

ஓட்டைப் பானை! என்செய்வேன்!
     உறங்கா இரவு நீள்கிறது!
கூட்டைக் களைத்துக் குஞ்சுகளைக்
     கொள்ளும் பாவம்! அய்அய்யோ!
வேட்டை மிருகம்! உள்ளமெனும்
     கூட்டை உடைத்துத் சீறுவதோ?
ஆட்டை மாட்டைக் குன்றேந்தி
     அன்பாய்க் காத்த பேரழகா!

அண்ணன் என்ன? பின்வந்த
     தம்பி என்ன? ஆசையினால்
மன்னன் என்று கொஞ்சிமகிழ்
     மனைவி என்ன? உறவென்னும்
பின்னல் என்ன? துயர்க்கடலே!
     பிறவா திருக்கும் பேறருளாய்!
அண்ணல் இராமா! இவ்லுலகை
     அடியால் அளந்த வில்லழகா!

தீரா நோயால் வலிபெருக,
     திண்தோள் குன்றி உயிர்அழுவ,
ஆராக் காயம் அனம்படர,
     அமுதா? நஞ்தா? மருண்டுழல,
தேரா வாழ்வு! பழிபாவம்!
     திக்கற் றிருக்கும் எனையிங்குப்
பாரா(து) எனோ? ஈரடியால்
     பாரை அளந்த பரம்பெருளே!

நம்பி இருந்தேன்! உறவாடி
     நாசம் புரிந்து நகன்றனரே!
தம்பி பிடித்துக் கயிர்கட்டித்
     துடிக்கத் துடிக்க வதைப்பதுபோல்
தம்பி என்றே சிலர்நடித்துத்
     தாங்காத் துயரைத் தந்தனரே!
வெம்பி விழும்முன் முணிவீந்து
     வெற்றி தருவாய் வில்லழகா!

துணையாய் எண்ணிப் பயணித்தேன்!
     தூங்கும் பொழுது சதிபுனைந்தார்!
இணையாய் எண்ணி உடன்சேர்த்தேன்!
     எமனை விழுங்கி ஏவ்..என்றார்!
கணையாய் வந்து பாய்கிறது
     காலம் போட்ட பொய்க்காதல்!
அணையாய் நின்றே ஆழ்துயரை
     அடியோ(டு) அகற்றுத் திருவரங்கா!

அறிவும் குறைவு! அகம்கொண்ட
     அழகும் குறைவு! உயிர்களிடம்
பரிவும் குறைவு! மேன்மைதரும்
     பண்பும் குறைவு! தீயோர்தம்
பிரிவும் குறைவு! பெரியோர்தம்
     நட்பும் குறைவு! உன்நாம
தெளிவும் அருளும் வேண்டுகிறேன்!
     தேனார் சோலைத் திருவரங்கா

அலைபோல் ஆசை பொங்கிவர,
     அதன்மேல் ஆடி மயங்கிவிழ,
கலைபோல் காதல் காட்சிதர,
     கனல்போல் காமம் பற்றியெழ,
இலைபோல் காய்ந்து எரிவதுவோ?
     தலைமேல் பதித்த எழுத்துகளை
மலைமேல் பதித்த திருவடியால்
     மாற்றி எழுது மாயவனே!