jeudi 20 décembre 2012

புதியதோர் உலகம் [பகுதி - 4]



புதியதோர் உலகம் செய்க

நானோ உயா்ந்த பிறப்பென்று
    நீயோ தாழ்ந்த பிறப்பென்று
தானோ தீனோ புளுகெல்லாம்
    சாற்றும் நபரைப் படைக்காதே!
ஆணோ பெண்ணோ இருசாதி!
    ஓளவை தந்த நன்னீதி!
ஊணோ(டு) ஊறிப் பொதுவுடைமை
    ஒளிரும் உலகை அமைத்திடுக!

(தொடரும்)

7 commentaires:

  1. ஆமாங்கய்யா!

    நல்ல அழகான தமிழில்-
    இனிக்க சொல்றீங்க அய்யா!

    மிக்க நன்றி அய்யா !

    எனது மின்னஞ்சல் முகவரி!
    seeni.shaah@gmail.com

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஒன்றிக் கருத்தாட மின்னஞ்சல் தந்துவந்தீா்!
      நன்றி உரைகின்றேன் நான்!

      Supprimer

  2. விருத்தம் நாளும் பாடுகின்றீர் -பலரும்
    விரும்பிட சுவையொடு பாடுகின்றீர்
    பொறுத்த மாகவே பாடுகின்றீர் -தலைப்பு
    பொருளை அழகுறப் பாடுகின்றீர்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சந்தக் கவிதையின் சொந்தமே! உன்னெழுத்து
      விந்தைத் தமிழின் விழா!

      Supprimer
  3. உங்கள் கவிதைகள் புதிய உலக படைக்கும்.அழகு தமிழில் அருமைக் கவிதை

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம்!

      அழகுத் தமிழில் அளித்த கவியை
      ஒழு(கு) உயிரென உவந்து

      Supprimer
  4. ஒளவை தந்த நன்னீதி
    கௌவ்வி நானும் வளர்ந்திட்டேன்.
    ஒளவியமின்றி யிவை படித்து
    கௌரவமாய் உலகும் வாழட்டும்!.

    இன்று நான்கு பாடம்.
    நன்று தொடர்வேன் மேலும்!
    நன்றி! நன்றி! பல.
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer