samedi 15 décembre 2012

உலகம் அழியட்டும்! [பகுதி - 2]



உலகம் அழியட்டும்!

கொள்ளைக் கூட்டப் போ்வழிகள்
    கொல்லா நெறியைப் பேசுகிறார்!
கள்ளை விற்கும் அரசியலார்
    காந்தி நெறியைக் கூறுகிறார்!
வெள்ளை ஆடை! கதா்க்குல்லா!
    உள்ளம் முழுதும் பேரிருட்டு!
பிள்ளை மருந்தில் கலப்படமா?
    பிணிசோ் உலகம் அழியட்டும்!

பொறிக்கி! தீயா்! கொலைபுரிவோர்
    புவியை ஆள முயல்கின்றார்!
முறுக்கி உடைத்து நீதியினை
    முடங்க வைத்து மகிழ்கின்றார்!
இறுக்கிக் கழுத்தை நெரிப்பதுபோல்
    இன்பத் தமிழைக் கொல்கின்றார்!
குறுக்கிக் குலைந்து வாட்டுகிற
    கொடிய உலகம் அழியட்டும்!

தண்டல்! வட்டி! பொய்வங்கி!
    தடிகள்! கத்தி! வெடிகுண்டு!
கிண்டல்! கூத்து! புண்பேச்சி!
    கேள்வி கேட்போர் உயிர்போகும்!
சுண்டல்! மாங்காய் விற்பதுபோல்
    சொக்கும் போதைப் பொருள்மலியும்!
கொண்டல் வண்ணா! கோவிந்தா!
    கொடுமை உலகம் அழியட்டும்!

(தொடரும்)

2 commentaires:

  1. எண்ணம் தன்னில் விஷம் ததும்ப
    எளிமையாகச் சிரிப்பவரும்
    தன்னை உயர்வாய்க் காட்டித் தினமும்
    தன்னலம் பேணி நடப்பவரும் இங்கு
    இன்னும் இவர்போல் நாம் அறியா
    அரக்கர்கள் உலகமும் அழியட்டும் ஐயா!.....

    வண்ணக் கவிதை வடிக்கும் தங்கள்
    வாய்மொழி இது சத்தியம் ஆகட்டும் ஐயா!.....

    RépondreSupprimer
  2. ''..கேள்வி கேட்போர் உயிர்போகும்!..''

    வேள்வியாகும் உயிரால் மக்கள்
    கேள்வியின்றி மௌனித்து நீதி
    தூளாகி மறையும் நிலையாகும்

    தொடருங்கள் தொடர்வேன்...
    வேதா. இலங்காதிலகம்.


    RépondreSupprimer