jeudi 22 novembre 2012

கண்ணன் குழலோசை







கண்ணன் குழலோசை

எடுப்பு

வண்ணக் குழலோசை - அது
வானில் மிதக்குதடி!
கண்ணன் குழலோசை - என்
காதில் இனிக்குதடி!
                                   (கண்ணன்)

உடன் எடுப்பு

உள்ளம் துடிக்குதடி - என்றன்
உடலும் சிலிர்க்குதடி!
வெள்ளம் போலெண்ணம் - ஏனோ
விரைந்து ஓடுதடி!
                         (கண்ணன்)

தொடுப்பு

அலைகடல் ஓரத்தில் - அன்றொருநாள்
நிலைதடு மாறிநின்றேன்!
கலைகளைத் தாமுடைய - மாய
கண்ணனை நான்கண்டேன்!
                         (கண்ணன்)

முடிப்பு

அன்ன நடைநடந்தேன்!
பின்னல் அவிழ்ந்ததென்றான்!
இன்னும் நாணமேனோ?
இங்கே வாடியென்றான்!
கன்னல் மொழிபேசி..
வண்ண மலர்சூடி..
கண்ணன் எனையணைத்துக்
காதல் சடைமுடித்தான்!
                         (கண்ணன்)

2 commentaires:

  1. அழகான பாடல்... ரசித்தேன்...

    வாழ்த்துக்கள் ஐயா...
    த.ம.1

    RépondreSupprimer