samedi 18 janvier 2014

பறக்குதடி நெஞ்சம்




பறக்குதடி நெஞ்சம்

எடுப்பு

உன்றன் உருவம் - பாட
உள்ளம் புகுந்ததடி!
என்றன் பருவம் - வாட
ஏக்கம் மிகுந்ததடி!
                   (உன்றன்)

தொடுப்பு

தென்றல் காற்றே - தமிழ்த்
தேனின் ஊற்றே!
சின்ன நாற்றே - கிளி
சிரிக்கும் கீற்றே!
                   (உன்றன்)

முடிப்பு

பாடும் குரல்கேட்டுப் பறக்குதடி நெஞ்சம் - நீ
சூடும் கவிகேட்டுச் சுரக்குதடி மஞ்சம்!
வாடும் நிலைகோர்த்து வளருதடி தஞ்சம் - நீ
ஆடும் கலைபார்த்து ஆசையலை மிஞ்சும்!
                                            (உன்றன்)


கோடி மலரழகைக் கொண்டொளிரும் பெண்ணே - உனைக்
கூடிக் கற்பனையில் கண்டொளிரும் கண்ணே!
தேடி வருகையிலே தேன்பொழியும் விண்ணே - உனைப்
பாடிப் பரவுகையில் மணக்குதடி மண்ணே!
                                            (உன்றன்)

8 commentaires:

  1. ஆகா... ரசிக்க வைக்கும் பாடல் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  2. பாடும் குரல்கேட்டுப் பறக்குதடி நெஞ்சம் - நீ
    சூடும் கவிகேட்டுச் சுரக்குதடி மஞ்சம்!
    வாடும் நிலைகோர்த்து வளருதடி தஞ்சம் - நீ
    ஆடும் கலைபார்த்து ஆசையலை மிஞ்சும்!


    ஆஹா... அருமை ஐயா...

    RépondreSupprimer
  3. அருமையான கவித்தேன்

    RépondreSupprimer
  4. ஆகா... ரசிக்க வைக்கும் பாடல் ஐயா...

    RépondreSupprimer
  5. வணக்கம்
    ஐயா.
    பாடல்மிக அற்புதமாக உள்ளது... வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  6. பறக்கும் நெஞ்சக் கவியினிலே
    கிறக்கம் கொள்ளுதே மனமெல்லாம்
    சிறக்கும் என்றும் உம்கவிகள்
    பிறக்கும் மானுட மனமெல்லாம் ..!

    அழகான பாடல் அருமை கவிஞரே
    வாழ்க வளமுடன்
    7

    RépondreSupprimer
  7. என்ன அழகு ! என்ன அழகு !! அற்புதம் ஐயா. ஐயா தங்கள் வாழ்த்துகள் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க ஐயா. நலம் தானே ?

    RépondreSupprimer