வெண்பா மேடை - 95
பழமொழி வெண்பா!
குறைகுடம் கூத்தாடும்!
எல்லாம் தெரியுமென எள்ளி நகையாடும்!
சொல்லால் துயரைச் சுமந்தாடும்! - பொல்லாப்
பொறையுடன் பொங்கிப் புரண்டாடும்! ஆடும்
குறைகுடம் ஒக்கும் குணம்!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
சிறந்த நெறிகளைப் பழமொழியாக நம் முன்னோர் வழங்கி வந்தனர். வெண்பாவால் பாடப்பட்ட 'பழமொழி நானுாறு' என்ற நுால் தமிழில் உள்ளது.
ஒரு பழமொழியின் கருத்தைத் தாங்கி இவ்வெண்பா அமையவேண்டும். 'குறைகுடம் கூத்தாடும்' என்ற பழமொழியை மேற்கண்ட வெண்பா பகர்கின்றது.
விரும்பிய பொருளில் 'பழமொழி வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து பழமொழி வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
05.08.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire