வெண்பா மேடை - 152
மூவின வெண்பா - 3
கனியகமே! வாகணியே! கண்வேத மாயா!
பனியகமே! யாகமுரை,பா ணா..வா! - தனியா!
கனவே கணியகமே! வாகைனர் தேனார்
கனிவே! தமிழே கமழ்!
பண்வகைநல் கும்..வா! பணிவகை நல்கும்..வா!
கண்வகைநல் கும்..வா! கமழ்தமிழ் - தண்வகை
நல்கும்..வா! தேனே..வா! பாநாவு பொன்வகை
மல்கும்..வா! காநல்கும் வா!
கண் - அறிவு
கா - சோலை
இவ்வெண்பாவில் வல்லினவெழுத்தைத் தொடர்ந்து மெல்லினவெழுத்தும், அதைத்தொடந்து இடையினவெழுத்தும் என மாறி மாறி வெண்பாவின் தொடக்கத்திலிருந்து ஈற்றுவரை அமையவேண்டும்.
விரும்பிய பொருளில் 'மூவின வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
14.12.2019


