Affichage des articles dont le libellé est நல்ல தமிழ். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est நல்ல தமிழ். Afficher tous les articles

mardi 19 août 2014

உணவும் பெயரும்



உண்ணும் உணவும்  உயர்தமிழ்ப் பெயரும்


அல்வா            : களினி, தேம்பசை, இன்களி, தீம்பசை
கேசரி              : செழும்பம், பழும்பம்
வரிக்கை (பொரை)  : வறக்கை
புரூட் சூசு          : பழச்சாறு, கனிச்சாறு,
குருமா             : கூட்டாணம்
சப்பாத்தி           : கோந்தடை
பச்சி               : தோய்ச்சி, மாவேச்சி
பிரட் (ரொட்டி)      : மெத்தப்பம், செவப்பம்
புரோட்டா          : புரியடை
கூல்டிரிங்சு         : குளிர்குடிப்பு தண்குடிப்பு
சாம்பார்            : பருப்புக்குழம்பு, மென்குழம்பு
நூடுல்சு            : இழைமா
ரச்க்               : வறைச்சில்
ஐசு                : பனிகம்
ஐசுகிரீம்            : பனிக்குழைவு, பனிப்பாகு
கோன் ஐசுகிரீம்     : கூம்புப் பனிப்பாகு
சோடா             : காலகம், உப்பகம்,
கிச்சடி             : காய்ச்சோறு, காய்மா
சட்னி              : அரைப்பம், துவையல்
சாங்கிரி (சிலேபி)   : முறுக்கினி
ரோசு மில்க்        : முளரிப்பால், செம்பனிப்பால்
கேக்               : கட்டிகை,
சமுதா             : கறிப்பொதி,
பாயசம்            : பாற்கன்னல், கண்ணமுது
பிஸ்கட்            : ஈரட்டி, மாச்சில், முறுவட்டி
போண்டா          : உழுந்தை
பஃப்               : புடைச்சி
பன்                : மெதுவன்
லட்டு              : கோளினி
கலர்               : வண்ணீர்
காபி               : குளம்பி
புரூட் சாலட்       : பழக்கூட்டு, கனிக்கணம்
புரூட் ஐசு          : கனிச்சாறு
டீ                  : தேநீர்
ஆம்லெட்          : முட்டையடை
குலோப் சாம்       : தேங்கோளி
குளுக்கோசு        : மாச் சக்கரை
சாக்லெட்           : பழுப்பினியம், காவிக்கண்டு, கருங்காவிக் கண்டு
சிவிங்கம்          : சவைப்பயின், தீஞ்சுவை
ரைசு               : அரிசி
சாம்               : பாகு

(தனித்தமிழ்ச் சொற்களை அறிந்துகொள்ள
மொழியறிஞர் ப. அருளி படைத்த
"இவை தமிழல்ல" என்ற அகராதியைக் கற்குமாறு வேண்டுகிறேன்.

மொழியறிஞர் ப. அருளி
தனித்தமிழ் மனை
காளிக்கோயில் தெரு
தமிழூர்
புதுச்சேரி - 605 009

dimanche 16 septembre 2012

நல்லதமிழ் [ பகுதி - 9 ]




உளமார - உளமாற

உளமார என்னும் சொல்லுக்கு மனம்நிறைய என்பது பொருள். உளமாற என்னும் சொல்லுக்கு மனம் மாறுதலடைய என்பது பொருள். (உளமார நன்றியைத் தெரிவிக்கிறேன். உளம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்) (உளமாற நன்றியைத் தெரிவிக்கிறேன் உளம் மாற நன்றியைத் தெரிவிக்கிறேன்) உளமார மனமார என்றால் உளம் நிறைய மனம் நிறைய என்றும் உளமாற மனமாற என்றால் உள்ளம் மாறுபட மனம் மாறுபட என்றும் பொருள்படும்.

பண்டக சாலை - பண்ட சாலை

பண்டக சாலை என்பது தவறு, பண்ட சாலை என்று எழுதுவது சரியானது. பண்டம் விற்கும் அல்லது வைத்திருக்கும் சாலை என்பது பொருள்


பிழை                 } திருத்தம்

சமச்சீா் கல்வி         } சமச்சீா்ச்கல்வி
புதுவை கழகம்        } புதுவைக் கழகம்
கடை பிடிப்பு          } கடைப்பிடிப்பு
முதலியார்ப்பேட்டை   } முதலியார் பேட்டை
மாநில பொதுக்குழு    } மாநிலப் பொதுக்குழு
பொதுக்குழு கூட்டம்   } பொதுக்குழுக் கூட்டம்
கூட்டுறவு சங்கம்      } கூட்டுறவுச் சங்கம்
வாழ்த்தி பேசினார்     } வாழ்த்திப் பேசினார்
வரலாற்று சுவடுகள்   } வரலாற்றுச் சுவடுகள்
சங்க தலைவா்        } சங்கத் தலைவா்

samedi 15 septembre 2012

நல்லதமிழ் [ பகுதி - 8 ]



பழனி - பழநி

பழனி என்பதே சரியான சொல். பழம் நி என்று புராண அடிப்படையில் பிரித்துப் பொருள் கொள்ளும் சிலர் பழநி  என்று எழுதுகின்றனர். அறுவெறுப்பு என்பது பிழை. அருவருப்பு என்பதே சரி. கத்திரித்தான் என்பது பிழை. கத்தரித்தான் என்பதே சரி. வருகை புரிந்தார் எனல் வேண்டா. வந்தார் என்பதே போதும். சிறிது நாள் சென்று வா எனல் வேண்டா. சில நாள் சென்று வா என்க.  

எனது மகன் - என் மகன்

எனது மகன் என்பது பிழை. என் மகன், எனக்கு மகன், என்னுடைய மகன் என்பன சரி. ஏழ்மை என்பது பிழை. ஏழைமை என்பதே சரி. அடகுக் கடை என்பது பிழை, அடைவுக் கடை என்பதே சரி.

நிறை - நிரை

நிறை, நிரை ஆகிய சொற்கள் பொருள் வேறுபாடு உடையன. நிறை என்னும் சொல்லுக்கு நிறைந்த, முழுமையான என்னும் பொருள்களும், நிரை என்னும் சொல்லுக்கு வரிசை, கூட்டம் என்னும் பொருள்களும் உண்டு. நிறைமதி, ஆநிரை ஆகிய சொற்களைக் காண்க.

வலதுபக்கம் - வலப்பக்கம்

வலது பக்கம், இடது பக்கம் என்று எழுத வேண்டா, வலப்பக்கம், இடப்பக்கம் என்று எழுதுக. முகர்ந்து பார் என்பது பிழை, மோந்து பார் என்பதே சரி. வாசல் எனல் வேண்டா, வாயில் என்று எழுதுக

எண்ணை - எண்ணெய்

எண்ணை என்று எழுதுவது தவறாகும். எள் 10 நெய் ஸ்ரீ எண்ணெய் எள்ளிலிருந்து எடுக்கும் நெய் என்பது பொருள். எனவே மண்ணெண்ணெய் விளககெண்ணெய் என்று எழுதும்போது எண்ணெய் என்பது ''ழடை'' என்று பொருள்படும் காரணப் பெயர்ப்பொருளை இழந்து விடுகிறது.

நெல்லைக் குத்தினாள் - நெல்லைக் குற்றினாள்

நெல்லைக் குத்தினாள் என்பது தவறு. நெல்லைக் குற்றினாள் என்றும், கையால் முகத்தில் குத்தினான் என்றும் எழுதுக. அடமழை, உடமை ஆகிய சொற்கள் தவறாகும். அடைமழை, உடைமை என எழுதுக.

எல்லாரும் - எல்லோரும்

எல்லாரும் எல்லோரும் என இவ்விரு சொற்களும் சரியானவையே. செய்யுளில் மட்டும் எல்லாரும் என்பது எல்லோரும் என்று வரும். '' ஆகலும் செய்யுளில் உரித்தே'' என்னும் இலக்கணப்படி செய்யுளில் நல்லான் என்னும் சொல்லில் உள்ள '''' '''' மாறி வில்லோன் என்றும் தொடியாள் என்பது தொடியோள் என்றும் வரும். உரைநடையில் எல்லாரும் என்று எழுதுவதே சிறப்பு.

எய்தல் - எய்துதல்

இவ்விரு சொற்களைப் பல பிழைபட எழுதுவதைக் காண்கிறேன். எய்தல், எய்துதல் ஆகிய சொற்களைப் பொருள் உணர்ந்து கையாள வேண்டும். எய்தல் என்னும் சொல்லுக்கு அம்பு போன்றவற்றை எய்தல் என்றும், எய்துதல் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை எய்தல் என்றும் பொருள் கொள்ள வேண்டும். இராமன் அம்பை எய்தான். இராமன் காட்டை எய்தினான்.

வினாயகர் - விநாயகர்

வி+நாயகர் = விநாயகர் தமக்குமேல் தலைவன் இல்லாதவர் என்பது பொருள் எனவே விநாயகர் என எழுத வேண்டும்.

உரியது - உரித்தது

உரியது என்பது இந்நூல் அவனுக்கு உரியது என்றும், உரித்தது என்பதை தேங்காய் உரித்தது என்றும் பொருள் உணர்ந்து எழுதுதல் வேண்டும். நன்றியை உரித்ததாக்குகிறேன் (உரித்தது 10 ஆக்குகிறேன்) என்று எழுதுவதும் பேசுவதும் பிழையாகும். நன்றியை உரித்தாக்குகிறேன் என்பதே சரி.
(தொடரும்)

vendredi 14 septembre 2012

நல்லதமிழ் [ பகுதி - 7 ]



பழனி - பழநி

பழனி என்பதே சரியான சொல். பழம் நி என்று புராண அடிப்படையில் பிரித்துப் பொருள் கொள்ளும் சிலர் பழநி  என்று எழுதுகின்றனர். அறுவெறுப்பு என்பது பிழை. அருவருப்பு என்பதே சரி. கத்திரித்தான் என்பது பிழை. கத்தரித்தான் என்பதே சரி. வருகை புரிந்தார் எனல் வேண்டா. வந்தார் என்பதே போதும். சிறிது நாள் சென்று வா எனல் வேண்டா. சில நாள் சென்று வா என்க.   

எனது மகன் - என் மகன்

எனது மகன் என்பது பிழை. என் மகன், எனக்கு மகன், என்னுடைய மகன் என்பன சரி. ஏழ்மை என்பது பிழை. ஏழைமை என்பதே சரி. அடகுக் கடை என்பது பிழை, அடைவுக் கடை என்பதே சரி.

நிறை - நிரை

நிறை, நிரை ஆகிய சொற்கள் பொருள் வேறுபாடு உடையன. நிறை என்னும் சொல்லுக்கு நிறைந்த, முழுமையான என்னும் பொருள்களும், நிரை என்னும் சொல்லுக்கு வரிசை, கூட்டம் என்னும் பொருள்களும் உண்டு. நிறைமதி, ஆநிரை ஆகிய சொற்களைக் காண்க.

வலதுபக்கம் - வலப்பக்கம்

வலது பக்கம், இடது பக்கம் என்று எழுத வேண்டா, வலப்பக்கம், இடப்பக்கம் என்று எழுதுக. முகர்ந்து பார் என்பது பிழை, மோந்து பார் என்பதே சரி. வாசல் எனல் வேண்டா, வாயில் என்று எழுதுக

எண்ணை - எண்ணெய்

எண்ணை என்று எழுதுவது தவறாகும். எள் 10 நெய் ஸ்ரீ எண்ணெய் எள்ளிலிருந்து எடுக்கும் நெய் என்பது பொருள். எனவே மண்ணெண்ணெய் விளககெண்ணெய் என்று எழுதும்போது எண்ணெய் என்பது ''ழடை'' என்று பொருள்படும் காரணப் பெயர்ப்பொருளை இழந்து விடுகிறது.

நெல்லைக் குத்தினாள் - நெல்லைக் குற்றினாள்

நெல்லைக் குத்தினாள் என்பது தவறு. நெல்லைக் குற்றினாள் என்றும், கையால் முகத்தில் குத்தினான் என்றும் எழுதுக. அடமழை, உடமை ஆகிய சொற்கள் தவறாகும். அடைமழை, உடைமை என எழுதுக.

எல்லாரும் - எல்லோரும்

எல்லாரும் எல்லோரும் என இவ்விரு சொற்களும் சரியானவையே. செய்யுளில் மட்டும் எல்லாரும் என்பது எல்லோரும் என்று வரும். '' ஆகலும் செய்யுளில் உரித்தே'' என்னும் இலக்கணப்படி செய்யுளில் நல்லான் என்னும் சொல்லில் உள்ள '''' '''' மாறி வில்லோன் என்றும் தொடியாள் என்பது தொடியோள் என்றும் வரும். உரைநடையில் எல்லாரும் என்று எழுதுவதே சிறப்பு.

எய்தல் - எய்துதல்

இவ்விரு சொற்களைப் பல பிழைபட எழுதுவதைக் காண்கிறேன். எய்தல், எய்துதல் ஆகிய சொற்களைப் பொருள் உணர்ந்து கையாள வேண்டும். எய்தல் என்னும் சொல்லுக்கு அம்பு போன்றவற்றை எய்தல் என்றும், எய்துதல் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை எய்தல் என்றும் பொருள் கொள்ள வேண்டும். இராமன் அம்பை எய்தான். இராமன் காட்டை எய்தினான்.

வினாயகர் - விநாயகர்

வி+நாயகர் = விநாயகர் தமக்குமேல் தலைவன் இல்லாதவர் என்பது பொருள் எனவே விநாயகர் என எழுத வேண்டும்.

உரியது - உரித்தது

 உரியது என்பது இந்நூல் அவனுக்கு உரியது என்றும், உரித்தது என்பதை தேங்காய் உரித்தது என்றும் பொருள் உணர்ந்து எழுதுதல் வேண்டும். நன்றியை உரித்ததாக்குகிறேன் (உரித்தது 10 ஆக்குகிறேன்) என்று எழுதுவதும் பேசுவதும் பிழையாகும். நன்றியை உரித்தாக்குகிறேன் என்பதே சரி.
                                                                                                                                           (தொடரும்)

mercredi 12 septembre 2012

நல்லதமிழ் [ பகுதி - 6 ]




தொலைப்பேசி - தொலைபேசி

தொலைபேசி என்பது சரி. தொலைபேசி - தொலைக் கண் பேசுகருவி, மனைக்கண் புகு விழா, இவை போலும் ஏழாம் வேற்றுமைத் தொகையில் வருமொழி வினையாயவிடத்து இயல்பாகும்.

பயிர் - பயறு - பருப்பு

பயிர், பயறு, பருப்பு இவற்றில் எது சரி? மூன்றும் சரியே. பயிர் - விளைபொருள். பயறு, பருப்பு - ஒரு வகைத் தானியம்.

அவைகள் - அவை

அவைகள் அவைகளை என்று எழுத வேண்டாம். அவை அவற்றை என்று எழுதுக. (அவை, அவற்றை என்று சொன்னாலே பன்மையைக் குறிக்கும்) எல்லா மடல்களைக் கொண்டு வா என்பது பிழை. எல்லா மடல்களையும் கொண்டு வா என்பதே சரி. அனைத்துக் கடைகள் அடைக்கப்பட்டன என்பது பிழை. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன என்பதே சரி.

ஏழ்மை - ஏழைமை

வறுமை என்ற பொருளில் ஏழ்மை என்பது பிழையாகும். ஏழைமை என்பதே சரியாகும். ஏழைமை - ஏழைத்தன்மையைக் குறிக்கும்.

நூலைக் கோர்த்து - நூலைக் கோத்து

ஊசியில் நூலைக் கோர்த்துக் கொடு என்பது பிழை. ஊசியில் நூலைக் கோத்துக் கொடு என்பதே சரி. கோறுகிறேன் என்பது பிழை. கோருகிறேன் என்பதே சரி. அதுவல்ல என்பது பிழை. அதுவன்று என்பதே சரி.

தேனீர் - தேநீர்

தேன் 10 நீர் ஸ்ரீ தேனீர் என்று வரும். தேயிலையில் தயாரிக்கும் நீரைத் தேநீர் என்று எழுத வேண்டும். வயிறாற உண்டான், வாயாற வாழ்த்தினார் என்பன பிழை. வயிறார உண்டான், வாயார வாழ்த்தினார் என்பனவே சரி.

ஒவ்வொரு பையன்களும் - ஒவ்வொரு பையனும்

ஒவ்வொரு பையன்களும் என்பது பிழை. ஒவ்வொரு பையனும் என்பதே சரி. பாலோ அல்லது தேநீரோ குடிப்பேன் எனல் வேண்டாம். பாலோ தேநீரோ குடிப்பேன் என்றோ, பால் அல்லது தேநீர் குடிப்பேன் என்றோ கூறுக.

புகழ்தமிழ் - புகழ்த்தமிழ்

மேலுள்ள இரண்டு சொற்களும் சரியானவையே. புகழ்த்தமிழ் - புகழை உடைய தமிழ் ( இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.) புகழ்தமிழ் வினைத்தொகையாகும். (வினைத்தொகையில் வல்லினம் மிகாது)

எல்லாரும் - எல்லோரும்

இவ்விரு சொற்களும் சரியானவையே. '', ஆகலும் செய்யுளில் உரித்தே'' என்னும் இலக்கணப்படி, செய்யுளில் நல்லான் என்னும் சொல்லில் உள்ள '''' '''' மாறி நல்லோன் என வந்தது. செய்யுள்மரபு உரைநடையிலும், பேச்சு வழக்கிலும் இடம் பெற்றுவிட்டதால் எல்லாரும் என்பது எல்லோரும் என மறுவடிவம் நிலைத்துவிட்டது.

அவரைத் தொடர்பு கொள் - அவரோடு தொடர்பு கொள்

அவரைத் தொடர்பு கொள் என்பது பிழை. அவரோடு தொடர்பு கொள் என்பதே சரி. இங்கே பழங்கள் கிடையாது என்பது பிழை. இங்கே பழங்கள் கிடையா என்பது சரி. இளநீர் கிடைக்க மாட்டேன் என்பது பிழை. இளநீர் கிடைக்கிறதில்லை என்பதே சரி. வேலையை எடுத்துக் கொள் என்பது தமிழ் மரபன்று. வேலையை ஒப்புக் கொள் என்பதே தமிழ் மரபு.

கணவன் மற்றும் மனைவி - கணவன் மனைவியர்

கணவன் மற்றும் மனைவி எனபது தமிழ் மரபன்று. கணவன் மனைவியர்,  கணவனும் மனைவியும் என்பனவே தமிழ் மரபு. தாய் தகப்பன்கள் என்பது பிழை. தாய் தகப்பன்மார் என்பதே சரி.
                                                                                                                                           (தொடரும்)