கொஞ்சுந் தமிழ்
மயக்கும் இன்ப
மதுவே வாராய்!
மணக்கும் வண்ண
மலரே வாராய்!
வியக்கும் இனிய
தமிழே வாராய்!
வெற்றி நிலைக்க விரைந்தே வாராய்!
படிக்கப் படிக்கப் படரும் தமிழே!
பாடப் பாடச் சுடரும் தமிழே!
குடிக்கக் குடிக்கச் சுரக்கும் தமிழே!
குன்றாச் சுவையைக் கொடுக்கும் தமிழே!
என்னை யாளும் வண்ணத் தமிழே
என்றன் நாவில் இருக்க வாராய்!
உன்னைப் போற்றி
உள்ளம் மகிழ
உன்றன் அருளை உவந்து தாராய்!
10.06.1980





