mardi 28 août 2018

வெண்மேடை - 117


வெண்மேடை - 117
  
இருசீர் ஒன்றும் வெண்பா!
  
மீனோடிப் பாயுதடி! வேல்வந்து தாக்குதடி!
மானோடிப் பாயுதடி! மாயவளே! - நானருந்தத்
தேனோடி பாயுதடி! தென்னவளே! கற்பனைகள்
வானோடிப் பாயுதடி வாய்த்து!
  
மேற்கண்ட வெண்பாவில் நான்கடிகளிலும் முதல் இரண்டு சீர்கள் முதலெழுத்தைத் தவிர மற்ற எழுத்துகள் ஒன்றி வருகின்றன. இவ்வாறு இருசீர் ஒன்றும் வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து அடி மறி இன்னிசைப் பஃறொடை வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
28.08.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire