விருத்த
மேடை - 104
அறுசீர் விருத்தம்
[குறிலீற்றுமா+கூவிளம்+மா+விளம்+விளம்+மா]
பொருவ னார்புரி நுாலர்
…… புணர்முலை
உமையவ ளோடு
மருவ னார்மரு
வார்பால்
…… வருவது மில்லைநம்
மடிகள்
திருவ னார்பணிந்
தேத்தும்
…… திகழ்திரு
வாஞ்சியத் துறையும்
ஒருவ னார்அடி
யாரை
…… ஊழ்வினை
நலியவொட் டாரே!
[சுந்தரர் தேவாரம்
- 7995]
வாக்கை விற்றிடும்
மக்கள்!
…… வந்திடும்
நடிகர்பின் கூட்டம்!
நாக்கை நன்முதல்
ஆக்கி
…… நரியெனச்
சுற்றிடும் தலைவர்!
காக்கைக் கூட்டினில்
குயில்போல்
…… கட்சியில்
கூட்டுறும் சூதர்!
போக்கை யெண்ணியே
வாடிப்
…… புனைந்துள
பாப்பயன் தருமோ?
[பாட்டரசர்]
10.04.2026
முதல் சீர் குறிலீற்றுமா, இரண்டாம் சீர்
கூவிளம், மூன்றாம் சீரும் ஆறாம் சீரும் மா, நான்காம் சீரும் ஐந்தாம் சீரும் விளம் என
ஓரடி அமையும். இவ்வமைப்பிலேயே நான்கடிகள் வரும். நான்கடிகள்
ஓரெதுகை பெறும். ஒன்று நான்காம் சீர்கள் மோனையுறும். விளம் வரும் இடங்களில் மாங்காய்
அருகி வருதலும் உண்டு.
விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர்
விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர்
கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்