விருத்த மேடை - 100
அறுசீர் விருத்தம்
கட்டளை விருத்தம்
மற்றிருந் தீர்கட்
கறியலாகா
………..மாதவன்
என்பதோர் அன்புதன்னை
உற்றிருந் தேனுக்
குரைப்பதெல்லாம்
………..ஊமைய ரோடு
செவிடர்வார்த்தை
பெற்றிருந்
தாளை ஒழியவேபோய்ப்
………..பேர்த்தொரு
தாயில் வளர்ந்தநம்பி
மற்பொருந் தாமல்
களமடைந்த
………..மதுரைப்
புறத்தென்னை உய்திடுமின்
[ஆண்டாள், நாச்சியார்
திருமொழி, நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - 617]
கலைமகள் தாயே!
கவிக்கடலே!
………..கடையன்
எனக்கும் அருள்தருவாய்!
தலைமகள் ஆன
தமிழணங்கின்
………..தாள்கள்
அளிக்கும் பொருள்தருவாய்!
அலைமகள் ஆகத்
தொடர்ந்துவரும்
………..ஆக்கஞ்
சிறக்கத் துணைபுரிவாய்!
மலைமகள் வன்மை
மனமடைய
………..மலர்கள்
துாவி யுனைத்தொழுதேன்!
[பாட்டரசர்]
13.03.2026
எழுத்தெண்ணிக்கை
ஒன்றி வரும் பாடலைக் கட்டளைப் பெயரிட்டுச் சொல்லப்படும். மேலுள்ள அறுசீர் விருத்தத்தில்
நிரையில் தொடங்கும் அரையடியில் 11 எழுத்துக்கள் வரும். நேரில் தொடங்கும் அரையடியில்
10 எழுத்துக்கள் வரும். ஒவ்வோர் அரையடியும் வெண்டளை பெறும். அரையடியின் ஈற்றுச்சீர்
விளங்காயாக வரும். முதல் இரு சீர்களில் விளங்காய் வராது. விளங்காய் வரும் 3 ஆம் சீரிலும்,
6 ஆம் சீரிலும் மாந்தண்பூ ஆகிய நாலசைச் சீர்கள் அருகி வரும்.
நான்கடிகள்
ஓரெதுகை பெறும். முதல் சீரும் நான்காம் சீரும் மோனையுறும்.
விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர்
விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர்
கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
14.03.2026



