samedi 24 février 2018

விருத்த மேடை - 29



விருத்த மேடை - 29
  
அறுசீர் விருத்தம் - 29
[தேமா + புளிமா + கூவிளம் + தேமா + புளிமா + கருவிளம்]
  
நாளெலாம் வினைசெய் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
நல்லார் வகுத்த பாதையில்
   நாளும் நடப்பாய்! நலமுறும்
வல்லார் வகுத்த பாதையில்
   வந்து செழிப்பாய்! துயர்தரும்
பொல்லார் வகுத்த பாதையில்
   போகா திருப்பாய்! அருள்தரும்
சொல்லார் வகுத்த பாதையில்
   தோய்ந்து சிறப்பாய் மனிதமே!
  
       [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
தேமா + புளிமா + கூவிளம் + தேமா + புளிமா + கருவிளம் என்ற வாய்பாட்டில் ஓரடி அமைய வேண்டும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
23.02.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire