lundi 26 février 2018

காலை வணக்கம்!



இனிய காலை வணக்கம்!
  
வாய்மை மொழியே! வளமுடைய பன்மொழிக்குத்
தாய்மை மொழியே! தவமொழியே! - துாய்மை
அளிக்கும் மொழியே! அருளேந்தி வா..வா..
களிக்கும் மொழியே கமழ்ந்து!
  
சீர்மணக்கும் செந்தமிழே! தார்மணக்கும் தண்டமிழே!
பார்மணக்கும் பைந்தமிழே! பண்டமிழே! - ஏர்மணக்கும்..
ஊர்மணக்கும்! ஒண்டமிழே! தேர்மணக்கும் பாக்களை
வேர்மணக்கும் வண்ணம் விளம்பு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
26.02.2018

1 commentaire: