mardi 27 février 2018

விருத்த மேடை - 33



விருத்த மேடை - 33
  
அறுசீர் விருத்தம் - 33
[தேமா 5 + கூவிளம்]
  
நேர்படப் பேசு! [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
அஞ்சிப் பேசல், கெஞ்சிப் பேசல்,
   அல்லல் மூட்டுமே!
விஞ்சிப் பேசல், வீணே பேசல்,
   மேன்மை ஓட்டுமே!
கொஞ்சிப் பேசல் குற்றம் பேசல்
   நஞ்சை ஊட்டுமே!
நெஞ்சம் கொள்ள நேரே பேசல்
   நேயம் மீட்டுமே!
  
       [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
தேமா 5 + கூவிளம் என்ற வாய்பாட்டில் ஓரடி அமைய வேண்டும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். ஒன்று, ஐநதாம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
27.02.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire