mardi 27 février 2018

காலை வணக்கம்!



இனிய காலை வணக்கம்!
  
முல்லை மலர்க்காடே! முந்து சுவைக்கவியே!
கொல்லை வளமே! குளிர்தமிழே! - எல்லையிலா
முன்னே உதித்தவளே! முத்தமிழே! நற்றமிழே!
என்னே..உன் தோற்ற எழில்!
  
செவ்வந்திப் பூவே! செழுந்தேனே! சிந்தையுள்
சிவ்வென்று மேவும் சிலுசிலுப்பே! - கவ்வென்[று]
உயிரைக் கவர்கின்ற ஒள்ளழகே! என்றும்
உயர்வைத் தருவாய் உவந்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
27.02.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire