விருத்த மேடை - 14
அறுசீர் விருத்தம் - 14
[முதல் நான்கு சீர் வெண்டளை + மா + தேமா ]
தீங்கதிர் வாண்முகத்தாள் செவ்வாய்
மணிமுறுவல் ஒவ்வா வேனும்
வாங்குநீர் முத்தென்று வைகலும்
மால்மகன்போல் வருதிர் ஐய!
வீங்கோதம் தந்து விளங்கொளிய
வெண்முத்தம் விரைசூழ் கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர்போல்
மீளும் புகாரே எம்மூர்!
[சிலம்பு, புகார். கானல் - 28]
ஓரடியில் முதல் நான்கு சீர்கள் இருவகை வெண்டளைகளாலும் அமையும். மாச்சீர் ஐந்தாம் சீராக வரும். ஈற்றுச்சீர் தேமாவாகும். இவ்வாறு நான்கடிகளைப் பெற வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமையும்.
ஒற்றுமை வலிமையாம்!
விரல்களின் ஒற்றுமை வென்றிடும் வன்மையை
விளைக்கும்! மீட்டும்
நிரல்களின் ஒற்றுமை நெஞ்சுள் மகிழ்வினை
நிறைக்கும்! கொள்கைக்
குரல்களின் ஒற்றுமை கோல வழியினைக்
கூட்டும்! காக்கும்
திரள்களின் ஒற்றுமை சீருற நாட்டினைச்
செய்யும் நன்றே!
ஒற்றுமை வேண்டும்! உயிரோங்கி மின்ன
ஒழுக்கம் வேண்டும்!
நற்றுணை யாக நறுந்தமிழ் நுால்கள்
நாளும் வேண்டும்!
கற்பனை ஓங்கிக் கருத்தைக் கவரும்
கவிதை வேண்டும்!
பொற்புடை வாழ்வும் புகமுடன் மேவிப்
பொலிய வேண்டும்!
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
04.02.2018
அறுசீர் விருத்தம் - 14
[முதல் நான்கு சீர் வெண்டளை + மா + தேமா ]
தீங்கதிர் வாண்முகத்தாள் செவ்வாய்
மணிமுறுவல் ஒவ்வா வேனும்
வாங்குநீர் முத்தென்று வைகலும்
மால்மகன்போல் வருதிர் ஐய!
வீங்கோதம் தந்து விளங்கொளிய
வெண்முத்தம் விரைசூழ் கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர்போல்
மீளும் புகாரே எம்மூர்!
[சிலம்பு, புகார். கானல் - 28]
ஓரடியில் முதல் நான்கு சீர்கள் இருவகை வெண்டளைகளாலும் அமையும். மாச்சீர் ஐந்தாம் சீராக வரும். ஈற்றுச்சீர் தேமாவாகும். இவ்வாறு நான்கடிகளைப் பெற வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமையும்.
ஒற்றுமை வலிமையாம்!
விரல்களின் ஒற்றுமை வென்றிடும் வன்மையை
விளைக்கும்! மீட்டும்
நிரல்களின் ஒற்றுமை நெஞ்சுள் மகிழ்வினை
நிறைக்கும்! கொள்கைக்
குரல்களின் ஒற்றுமை கோல வழியினைக்
கூட்டும்! காக்கும்
திரள்களின் ஒற்றுமை சீருற நாட்டினைச்
செய்யும் நன்றே!
ஒற்றுமை வேண்டும்! உயிரோங்கி மின்ன
ஒழுக்கம் வேண்டும்!
நற்றுணை யாக நறுந்தமிழ் நுால்கள்
நாளும் வேண்டும்!
கற்பனை ஓங்கிக் கருத்தைக் கவரும்
கவிதை வேண்டும்!
பொற்புடை வாழ்வும் புகமுடன் மேவிப்
பொலிய வேண்டும்!
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
04.02.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire