vendredi 28 août 2020

வெண்பா மேடை - 186


வெண்பா மேடை - 186
  
திருவழுதி நாடென்றும் தென்குருகூர் என்றும்
மருவினிய வண்பொருநல் என்றும் - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே! தெளிந்து!
  
[ஈசுவரமுனிவர் அருளிச்செய்த திருவாய்மொழி தனியன்]
  
ஆசை அலைபாயும்! அல்லல் நிறைந்தாடும்!
ஓசை குறுகி உயிர்வாடும்! - வேசையுறும்!
மந்தியாய்த் துள்ளும்! மதிசாயும்! ஏனென்று
சிந்தியாய் நெஞ்சே! தெளிந்து!
    
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
"சிந்தியாய் நெஞ்சே! தெளிந்து" ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
28.08.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire