vendredi 28 août 2020

வெண்பா மேடை - 185



  
எங்கள் கதியே! இராமா னுசமுனியே!
சங்கைகெடுத் தாண்ட தவராசா! - பொங்குபுகழ்
மங்கையர்கோன் ஈந்த மறையா யிரமனைத்தும்
தங்குமனம் நீயெனக்குத் தா!
  
[எம்பார் அருளிச்செய்த திருவாய்மொழி தனியன்]
  
அருட்சுடரே! எங்கள் அருளமுதே! பாடும்
பொருட்சுடரே ஓங்கப் புனைவாய்! - பெருஞ்சுடரே
பொங்குமனம் பூக்கப் புகழ்தருவாய்! சன்மார்க்கம்
தங்குமனம் நீயெனக்குத் தா!
    
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
"தங்குமனம் நீயெனக்குத் தா " ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
20.08.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire