vendredi 28 août 2020

வெண்பா மேடை - 182

வெண்பா மேடை - 182
  
ஓங்க லிடைவந்[து] உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்[து] இருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னோ் தனியாழி வெங்கதிரொன்[று] ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!
  
[தண்டியலங்கார வுரைமேற்கோள்]
  
எங்கும் பரவி எழில்மணக்கும்! எந்நாளும்
பொங்கும் புகழ்மணக்கும்! பூமணக்கும்! - சங்கமருள்
பொன்னேர் சுவடிகள் போற்றும் நெறிமணக்கும்!
தன்னேர் இலாத தமிழ்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
"தன்னேர் இலாத தமிழ்" என ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
01.08.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire