samedi 29 août 2020

சிந்துப்பா மேடை - 13

சிந்துப்பா மேடை - 13
  
பல்லவி - 2
  
திரையிசையில் மலர்ந்த சிறப்புடைய பல்லவியை எடுத்துக்காட்டாகக் கொண்டு பல்லவியைப் பாடுவோம்.
  
சிலையெடுத் தான்ஒரு சின்ன பெண்ணுக்கு!
கலைகொடுத் தான்அவள் வண்ணக் கண்ணுக்கு!
    
[கவியரசர் கண்ணதாசன், சர்வர் சுந்தரம்]
  
சிலையெடுத்தான், கலைகொடுத்தான் என்று தலையாகு எதுகையைப் பெற்றுள்ளது.
  
தான்ஒரு, தான்அவள் இரண்டாம் சீரும் எதுகை பெற்றது.
  
சின்ன, வண்ண என முன்றாம் சீரும் எதுகை பெற்று ஓசை ஒன்றி வந்தது.
  
பெண்ணுக்கு, கண்ணுக்கு என இயைபு அமைந்தது.
  
[சிலை - சின்ன] [கலை - கண்ணுக்கு] மோனை பெற்றது.
  
பண்கொடி மின்னிடப் பாடிப் படைத்தேன்!
தண்கொடி பின்னிடத் தாடி அடைத்..தேன்!
  
[பாட்டரசர்]
  
விரும்பிய பொருளில் இவ்வாறு ஒரு பல்லவி பாடுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாலவர் பயிலரங்கம் பிரான்சு
28.08.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire