mardi 24 juillet 2018

வெண்பா மேடை - 84   


வெண்பா மேடை - 84
  
குற்றெழுத்து வெண்பா!
  
இனிய தமிழெ[ன்] இதய[ம்] இணைய!
மனித[ம்] ஒளிர! மகிழ! - முனியி[ன்]
அமுத அருவி! அறிவி[ன்] அருளி!
குமுத எழிலி கொடு!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
    
குறில் மட்டும் இவ்வெண்பாவில் வரவேண்டும். நெடிலும், ஒற்றும் வாரா. [மேற்கண்ட வெண்பாவில் உள்ள ஒற்று வருமொழி உயிருடன் சேர்ந்து இல்லாமல் போகும்.
  
குற்றெழுத்துக்களால் ஆனா நேரிசை வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து குறில் வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
24.07.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire