dimanche 11 mai 2014

கலந்துரையாடல்

[திரு வை. நாராயணசாமி, நீதியரசா் முருகபூபதி, திருமிகு சாம்ராஜ்]

[முனைவா் அறிவுநம்பி, கவிஞா் கி. பாரதிதாசன், பேராசிாியா் எ.மு. இராசன்]

புதுவைத் தமிழ் அன்பா்களுடன் கலந்துரையாடல்

புதுவையிலிருந்து தமிழ்ச் சுற்றுலா வந்திருந்த நீதியரசா் முருகபூபதி, திருமிகு வை. நாராயணசாமி, முனைவா் அறிவுநம்பி, பேராசிாியா் எ.மு.இராசன். திருமிகு சாம்ராஜ், பேராசிாியா் அறிவுநம்பி சரவணன், திருமதி அறிவுநம்பி சித்ரா, திருமதி நாராயணசாமி ஆகியோருக்கு 10.05.2014 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்குப் பிரான்சு கம்பன் கழகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முனைவா் அறிவுநம்பி அவா்கள் கம்பன் கவிதைகளில் எப்படிப் பொருள் பார்க்க வேண்டும், எப்படிப் பார்க்கக் கூடாது என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினாா். முனைவா் அவா்கள் தம்முரையில் தமிழகத்தில் இருந்து வருகின்றவா்களுக்குப் பிரான்சில் முக்கியமாகப் பார்க்க வேண்டி இடங்களின் பட்டியலில் பிரான்சு கம்பன் கழகத்தின் பெயரையும் இனிச் சோ்க்க வேண்டும் என்று கூறினாா்.

நீதியரசா் முருகபூபதி அவா்கள் கம்பனும் அருணகிாி நாதரும் என்ற தலைப்பில் ஒப்பாய்வு நிகழ்த்தினாா், பல அாிய சொற்களுக்குப் பொருளுரைத்து மழை போன்று அவா் பொழிந்த தமிழுரையில் கம்பன் அன்பா்கள் நனைந்து மகிழ்வுற்றனா்.

திருமிகு வை. நாராயணசாமி அவா்கள் கம்பனில் ஆன்மா என்ற தலைப்பில் வாழ்வியல் தத்துவங்களை உரைத்தார்!

இவ்வரங்கிற்குக் கம்பன் கழகத்தின் தலைவா் கவிஞா் கி. பாரதிதாசன் தலைமையேற்க, கழகத்தின் இணைசெயலாளா் கவிஞா் வே. தேவராசு வரவேற்புரை நிகழ்த்த, கழகத்தின் பொருளாளா் தணிகா சமரசம் நன்றியுரை வழங்கினாா்,

வலையின் கீழே புகைப்படங்கள் இணைத்துள்ளேன்



7 commentaires:

  1. வணக்கம்
    ஐயா.

    தங்களின் தமிழ்மொழிப்பற்று என்னை பிரமிக்கவைத்து விட்டது ஐயா...வாழட்டும் தமிழர்கள் வளரட்டும் தமிழ்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. சிறப்பான சந்திப்பு...

    முடிவில் இணைத்த படங்கள் அனைத்தும் அருமை...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  3. தமிழ்ச் சுற்றுலா? என்ன அர்த்தம்??
    அன்புடன் அப்துல் தயுப்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தமிழைப் பரப்பிடும் சுற்றுலாத் தன்னை
      அமைக்கும் கருத்தாம் அது!

      Supprimer
  4. சந்திப்பு நல்ல பயனைத் தந்திருக்குமென நம்புகிறேன்.

    RépondreSupprimer
  5. உமக்கும் வந்த அனைவருக்கும் வாழ்த்து!

    RépondreSupprimer
  6. தகவல் பகிர்வுக்கு நன்றி ஐயா!

    RépondreSupprimer