vendredi 9 mai 2014

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 29



நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

இளமதி வணக்கம்!

கோடுகள் கோலமிடக் கொண்ட கலையொளிக்கு
ஈடுகள் உண்டோ இயம்பு!

கனவுகள் ஆயிரம் காட்டும் கவிதை
மனத்தைக் கிழிக்கும் வலி!

வற்றிய கண்கள் வடித்துள்ள சொல்யாவும்
முற்றிய பாட்டின் மொழி!

படித்ததை நெஞ்சுள் படிந்ததைத் தந்தீா்!
மடித்ததைக் காக்கும் மனம்

10.02.2013

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

இன்றமிழ் மாலதிக்கு என்வணக்கம்! நன்றிகள்!
உன்றமிழ்த் ஓங்கி உயருகவே! - நன்றே
வலைச்சரம் காட்டும் மணமிகு பூக்கள்!
கலைச்சரம் காட்டும் கமழ்ந்து!

19.02.2013

-------------------------------------------------------------------------------------------------
வணக்கம்
நல்ல பதிவை நலமுற தந்துள்ளீா்
வல்ல திறனை வகுத்து!

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

அருமையொளிர் ஆக்கத்தை ஆய்தே அளித்து
பெருமையொளிர் பேற்றைப் பெருக்கு!

நாட்டின் நிலையை நவின்றுள்ளீா்! இன்றமிழ்
ஏட்டின் இனிமை இசைத்து!

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

மழைக்கால முத்தங்கள் நெஞ்சமெனும் மன்றில்
இழைந்தாடும் என்றும் இனித்து!

மீண்டும் எழுவோம்! விளைந்த துயருக்கு
வேண்டும் உலகில்  விடை!

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

வெளியில் வாழ்வைத் தொலைத்துவிட்டு
இருட்டில் தேடுகிறார் வாழ்வை

என்ற புதுக்கவிதை உண்டு!

என்மக்கள் திரைப்படம் ஒருகலை
அதுவே வாழ்வன்று என்ற தெளிவைப் பெறும்வரை 
இதுபோன்ற பதிவுகள் தொடரவே செய்யும்

இருட்டை வாழ்வின் பேரொளியாய்
எண்ணும் தமிழா் தெளிவுறுக!
சுருட்டைப் பரட்டை காட்சிகளைச்
சொந்தம் என்றே எண்ணாதே!
உருண்டை உலகம்! கண்டுணர்ந்து
உரைத்த பொழுது கேட்டார்யார்?
கருத்தை ஆய்ந்து செயற்பட்டால்
காலம் போற்றும் என்தோழா!

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

நல்ல பதிவுகளை நன்றே படைத்திங்கு
வல்ல தழிழை வழங்கு!

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

அழகிய சொற்களில் அள்ளிப் படைத்தீா்
பழமாய் இனிக்கும் படைப்பு

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

கவிஞா் சுகுமார் கவிதைகள் இன்பச்
செவிநுகா் தேனெனச் செப்பு!

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

வரலாறு வருகின்ற தலைமுறைக்கு வாழ்க்கைப் பாடம்

வரலாறு கண்ட வழிகள்நம் வாழ்வின்
அரண்என எண்ணுக ஆய்ந்து!

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

நெஞ்சைக் கவரும் நிலையில் உரைத்துள்ளீா்
கொஞ்சும் தமிழைக் குழைத்து!

22.02.2013

-------------------------------------------------------------------------------------------------

கவிஞா் மாலதி அவா்களுக்கு வாழ்த்துக்கள்!

இனிக்கும் தமிழை இசைக்கின்ற தோழி
கனிபோல் அளித்தாய் கவி!

குன்றின் விளக்காய்க் கொடுத்த வலைச்சரம்
நன்றி நவில்கின்றேன் நான்

22.02.2013

-------------------------------------------------------------------------------------------------
 

4 commentaires:

  1. வணக்கம்
    ஐயா.
    கவிப்பூக்கள் எல்லம் அழுதம்..... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  3. அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer