lundi 24 mars 2014

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 27



நண்பா்களின் வலைப்பூக்களில்

என் கவிப்பூக்கள்

வணக்கம்!

இளமையின் பொங்கல் இயம்பிய சொற்கள்
வளமையைக் காட்டும் வழி!

17.01.2013

-----------------------------------------------------------------------------------

வணக்கம்!

என்றன் வலையில் இசைத்த கருத்துக்கள்
என்றும் இருக்கும் இனித்து!

17.01.2013

-----------------------------------------------------------------------------------

வணக்கம்!

நகரத்தை நோக்கி நகா்ந்த கவிதை
சிகரத்தை நோக்கும் சிறப்பு!

17.01.2013

-----------------------------------------------------------------------------------

வணக்கம்!

மக்கள் தலைவா்!இங்கு ஏழைஎளி யோர்உற்ற
சிக்கல் ஒழித்தார் சிறந்து!

17.01.2013

-----------------------------------------------------------------------------------

வணக்கம்!

குன்றிக் கிடந்தாலும் கூடவே நின்றுழலும்
நன்றி மறவாத நாய்!

17.01.2013

-----------------------------------------------------------------------------------

வணக்கம்

பாக்கள் ஆயிரம் சொல்லுகிற - பாடல்
பூக்கள் மணக்கும் பூஞச்சோலை!
ஈக்கள் போன்றே என்எண்ணம் - அமா்ந்து
இன்தேன் பருகும் இக்காலை!

நம்மினம் வாழ நவின்ற கவிபடித்துச்
செம்மனம் கொண்டேன் செழித்து!

மைவண்ணம் கண்டேன்! இளமதியே உன்னுடைய
கைவண்ணம் கண்டேன் கமழ்ந்து!

17.01.2013

-----------------------------------------------------------------------------------

வணக்கம்!

எத்தனை நாள்கள் வாழ்கை!
    இயம்பிய கதையைக் கண்டேன்!
முத்தென மின்னும் சொற்கள்!
    மூச்சியில் கலக்கக் கண்டேன்!
புத்தனைப் போன்றே சென்கள்
    புகன்றதை எண்ணிப் பார்த்தேன்!
இத்தனைக் காலம் வீணோ!
    எதிர்வரும் வினாடி வாழ்வு!

17.01.2013

-----------------------------------------------------------------------------------

வணக்கம்!

நுால்களின் காட்சியை நோக்கிக் களிப்பதுவே
நாள்களில் பெற்றநன் னாள்!

17.01.2013

-----------------------------------------------------------------------------------

வணக்கம்!

வேலு சாமி! முனிசாமி!
    வேறு சாமி பலருள்ளார்!
மாலு சாமி காலடியில்
    மகிந்து வாழும் தொண்டருள்ளார்!
ஆளு சாமி என்றுரைக்கும்
    ஆண்ட புளுகு காரருள்ளார்!
கேளு சாமி! கேளு!பாடல்
    துாளு சாமி! துாளுசாமி !

17.01.2013

-----------------------------------------------------------------------------------
 

5 commentaires:

  1. வணக்கம் !
    அனைத்தும் சிறப்பான கவிப் பூக்கள் !
    வாழ்த்துக்கள் ஐயா மென்மேலும் தொடரட்டும் .
    த .ம .4

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அம்பாள் அளித்த அருமைக் கருத்தொளிர
      எம்..மால் அளிப்பான் எழில்

      Supprimer
  2. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஓடோடி வந்தே உயா்தமிழ் உண்டவா்க்குக்
      கோடான கோடிக் கொடு!

      Supprimer
  3. கவிப்பூக்களால் மாலை தொடுத்து வழங்குவது
    சிறப்பே....!

    RépondreSupprimer