mardi 6 août 2013

புலவா் கவிதைகள்

பாரீசில் புலவா் இராமாநுசனார்





வலைத்தமிழ் உறவுகளே வணக்கம்!

ஐரோப்பியச் சுற்றுலா வந்திருந்த புலவா் இராமானுசனார் அவா்களை நேற்று இரவு அவா் தங்கியிருந்த விடுதியில் கம்பன் கழக உறவுகளுடன் சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன்!

புலவா் ஐயாவுடன் பேசிக் களித்த அந்த மணித்துளிகள் நெஞ்சுள் பதிவாகி நின்று மணக்கின்றன! உங்கள் மனங்களிலும் மணந்து மணம் வீசப் புகைப்படங்களைப் பதிவு செய்கிறேன்.



நிலவா் ஆக வலையுலகில்
     நின்றே ஒளிரும் தமிழ்நெஞ்சா்!
புலவா் இராமா நுசனாரைப்
     போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்திட்டேன்!
குலவும் தமிழின் சீா்காக்கும்
     கொள்கை மறவா் சந்திப்பு
மலரும் நினைவாய் எந்நாளும்
     மணக்கும்! இனிக்கும்! மாண்புடனே!

06.08.2013

6 commentaires:

  1. புலவர் ஐயாவைச் சந்தித்த நிகழ்வினைப் பதிவேற்றியுள்ளீர்கள்.
    படங்களும் உங்கள் கவியும் மிக மிக அருமையாக இருக்கிறது ஐயா!

    நடுநிசியில் அவரைச் சென்று சந்தித்து உரையாடி மகிழ்ந்துள்ளீர்கள்! நேரத்தினைக் காட்டுகிறது படங்கள்.

    பெருமைக்குரிய விடயம்தான். மிக்க மகிழ்ச்சியாயுள்ளது.

    பகிர்வினுக்கு மிக்க நன்றி ஐயா!

    RépondreSupprimer
  2. கொள்கை மறவாச்
    சந்திப்பு
    எந்நாளும்
    மணக்கும்
    இனிக்கும்
    நன்றி ஐயா

    RépondreSupprimer
  3. படங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.....

    சந்திப்புகள் தொடரட்டும்.....

    RépondreSupprimer
  4. என்றென்றும் மனத்தில் மலர்ந்திருக்கும் நினைவுகளின் வாசம். சந்திப்பின் புகைப்படங்கள் ரசித்தோம். பகிர்வுக்கு நன்றி ஐயா.

    RépondreSupprimer
  5. மகிழ்வானதொரு சந்திப்பு ! வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
  6. பொன்னான சந்திப்புக்கு என் வாழ்த்துகள்.

    RépondreSupprimer