dimanche 28 juillet 2019

மலைப் பந்தம்


மலை ஓவியக் கவிதை
  
இலக்கணமலை
முனைவர் இரா. திருமுருகனார் புகழ் ஓங்குகவே!
  
உலகே வியக்கு மொண்டமிழ்க் கோவே!
நலமே யளித்த நற்கலை யமுதே!
மொழியே தழைக்க மூண்ட சுடரே!
கழனிபோல் விளைந்த அருங்கவி வளமே!
முதுமதி போல நின்னுரு முந்தும்!
புதுமை நீயே! பொற்புடைக் கோ..வில்
கூர்மை கொண்ட வல்ல அறிவே!
சீரரும் சிந்தினைக் கனியென வுண்டு
கட்டிய நுாலைக் கற்றோர் நாளும்
கற்றே காத்திங் காழ்வர்! வீரா!
மொழிப்போர்க் களத்து வேழா!
பழிப்பா ருணரப் பாடிய தமிழிசை
வன்மை கோத்து வாரி யிடுமே!
திண்மழை யே!யா ழே!குழ லே!தினம்
மிகுமிகு கன்னல் மேவ வுழத
தகுநலங் காணத் தமிழ்க்குண மிகுகொண்டு
வண்ணத் தமிழை வழாங்க வருகவே!
    
மலையின் அடியில் 'உலகே' என்று பாடல் தொடங்கி இடம்வலம், வலம்இடம் என மாறிமாறிப் படித்துக் கொண்டே மலையின் உச்சிவரை சென்று, அங்கிருந்து நேரே சீழிறங்க முதல் செய்யுள் நிறைவடையும்.
      
நிலவண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை, மலையின் கீழிருந்து மேலலேறிக் கீழே யிறங்கினால் ஒரு குறள் வெண்பா வரும். குறளில் பாட்டுடைத் தலைவன் பெயரும் எனது வேண்டுதலும் உள்ளன.
  
குறள் வெண்பா
  
திருமுருக ராகத் திகழத் தமிழே
தருக கவியே தலை!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
27.08.2019

1 commentaire: