dimanche 14 juillet 2019

உடுச்சித்திர கவிதை


உடுச்சித்திர கவிதை
  
கண்ணா வாராய்!
  
கவிவளர் கோல்போல் வாராய்!
   கனிவளர் கோல்போல் வாராய்!
சுவைவளர் தேன்போல் வாராய்!
   சுனைவளர் நீர்போல் வாராய்!
சுனைவளர் மண்போல் வாராய்!
   சுளைவளர் மண்போல் வாராய்!
கவின்வள மரைபோல் வாராய்!
   கவிவளர் தமிழ்போல் காக்க!
  
கோல் - எழுதுகோல், மரம்
சுனை - மலைவூற்று, நீரும் நிழலும் உள்ள இடம்
கவி - கவிதை, புலவன்
கவின் - அழகு
  
கண்ணா எனக்கு நீ கவிதையைத் தருகின்ற எழுதுகோலாக வரவேண்டும். செழித்த கனிமரமாக வரவேண்டும். சுவைவளர் தேனாக வரவேண்டும். மலைவூற்றாக வரவேண்டும். நீரும் நிழலும் உள்ள நிலமாக வரவேண்டும். அழகாக மலர்ந்துள்ள தாமரைக் காடாக வரவேண்டும். புலவனாகிய என்னை வளர்க்கின்ற தமிழாக வரவேண்டும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
14.07.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire