mercredi 15 novembre 2023

பாவலர்மணி வெற்றிச்செல்வி

 

வணக்கம்

.

பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தம் ஆயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் முதலிடத்தில் வெற்றி பெற்ற பாவலர் வெற்றிச்செல்வி அவர்களுக்குப் பாவலர்மணி பட்டம் வழங்குகிறோம்.

.

பாட்டரசர் கோட்டையிலே பைந்தமிழ் நற்கொடியை

ஏட்டரசர் ஏத்திடவே ஏற்றியவர்! - ஈட்டுபுகழ்ச்

சீர்மணக்கும் எம்..வெற்றிச் செல்வியார்! பாமணியாய்ப்

பேர்மணக்கும் மேன்மையைப் பெற்று!

.

பாவலர்மணி பட்டம் பெற்ற வெற்றிச்செல்வி அவர்களுக்குப் பயிலரங்கம் சார்பாக வெண்பா மாலை சாத்த விரும்புகிறேன்.  பாவலர் பயிலரங்க உறவுகள் ஓர் வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

14.11.2023

Aucun commentaire:

Enregistrer un commentaire