dimanche 5 novembre 2023

பாவலர்மணி செந்தமிழாழன்

 

வணக்கம்

.

பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தம் ஆயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் முதலிடத்தில் வெற்றி பெற்ற பாவலர் சேந்தன்குடிச் செந்தமிழாழன் அவர்களுக்குப் பாவலர்மணி பட்டம் வழங்குகிறோம்.

.

தன்னாட்டுப் பற்றும் தமிழன்னை தந்தருளும்

இன்பாட்டுப் பற்றும் இருவிழிகள்! - என்றென்றும்

சீர்போற்றும் சேந்தன் குடிச்செந் தமிழாழன்

பார்போற்றும் பாமணியாம் பார்!

.

பாவலர்மணி பட்டம் பெற்ற சேந்தன்குடிச் செந்தமிழாழன் அவர்களுக்குப் பாவலர் பயிலரங்கம் சார்பாக வெண்பா மாலை சாத்த விரும்புகிறேன்.  பாவலர் பயிலரங்க உறவுகள் ஓர் வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

05.11.2023


 

Aucun commentaire:

Enregistrer un commentaire