mercredi 15 novembre 2023

பாவலர்மணி நிலவழகன்

 


வணக்கம்

.

பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தம் ஆயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் முதலிடத்தில் வெற்றி பெற்ற  பாவலர் நிலவழகன் [இரஞ்சினி சந்திரமோகன்] அவர்களுக்குப் பாவலர்மணி பட்டம் வழங்குகிறோம்.

.

விந்தை மணக்க விருத்தங்கள் ஆயிரம்

சிந்தை மணக்கச் செதுக்கிடுவார்! - முந்தையரின்

நேர்காத்து வாழும் நிலவழகர்! பாமணியாய்ப்

பேர்பூத்து வாழும் பிறப்பு!

.

பாவலர்மணி பட்டம் பெற்ற நிலவழகன் அவர்களுக்குப் பாவலர் பயிலரங்கம் சார்பாக வெண்பா மாலை சாத்த விரும்புகிறேன்.  பாவலர் பயிலரங்க உறவுகள் ஓர் வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

15.11.2023

Aucun commentaire:

Enregistrer un commentaire