samedi 29 février 2020

கேட்டலும் கிளத்தலும்



கேட்டலும் கிளத்தலும்
  
சொன்னபடிச் செய்தான் - சொன்னபடி செய்தான்
இவற்றில் எது சரி?
  
பாவலர் தென்றல்
  
--------------------------------------------------------------------------------------------------------------------------------
  
வினையை அடுத்துவரும் படி என்ற சொல்முன் வல்லினம் இயல்பாய் வரும். சொன்னபடி செய்தான், வரும்படி சொன்னான், போகும்படி கேட்டான்.
  
பெயரை அடுத்து வரும் படி முன் வல்லினம் மிகும். முறைப்படிச் செய்வான். சட்டப்படிக் குற்றம்.
  
சுட்டையும் வினாவையும் அடுத்து வரும் படி முன் வல்லினம் மிகாமலும் வரும், மிகுத்தும் வரும். அப்படி செய், அப்படிச் செய், இப்படி பார், இப்படிப் பார், எப்படி போவாய், எப்படிப் போவாய்.
  
அப்படி போகாதே! இப்படிச் சென்றிடுவாய்!
தப்படி இன்றித் தமிழ்தருவாய்! - செப்பும்
பெயர்வினை ஆய்ந்திடுவாய்! பீடுதமிழ் காப்பாய்!
எழிலணை செய்வாய் இசைந்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் - பிரான்சு
தொல்காப்பியர் கழகம் - பிரான்சு
29.02.2020.

Aucun commentaire:

Enregistrer un commentaire