ஆழ்ந்த இரங்கல்
அக்கா மலர்ஆதி லட்சுமியார் ஏன்பிரிந்தார்?
சொக்கா! கொடுமை துணிந்தாயே! - எக்காலும்
நின்றுழைத்த நெஞ்சத்தை என்றினிக் காண்பேனோ?
துன்பளித்த கூற்றே..நீ சொல்லு!
கம்பன் கழகம் தொடங்கிய காலத்திலிருந்து
அதன் உயர்வுக்கு உழைத்திட்ட
பாவலர் ஆதிலட்சுமி வேணுகோபால் அவர்கள்
இன்று மாலை இறைவனடி சேர்ந்தாரெனும் செய்தியை
ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவிக்கின்றோம்.
கம்பன் கழகம் பிரான்சு
06.10.2019

Aucun commentaire:
Enregistrer un commentaire