mardi 15 octobre 2019

வெண்பா மேடை - 146   


வெண்பா மேடை - 146
  
130 எழுத்துக்களில் அமைந்த நேரிசை வெண்பா
  
ஈர்ப்புணர்ந்தேன்! பார்த்துயிர்ப்பின் வேர்ப்புணர்ந்தேன்! சீர்த்தமிழ்ச்சொல்
சேர்ப்புணர்ந்தேன்! தேர்ப்புகழ்த்தென் தீர்ப்புணர்ந்தேன்! - கூர்ப்புணர்ந்தேன்!
ஆர்ப்புணர்ந்தேன்! மெய்ம்மலர்த்தேன் வார்ப்புணர்ந்தேன்! மண்ணுயிர்ப்பாழ்ந்[து]
ஓர்ப்புணர்ந்தேன் மெய்த்தமிழ்ச்சால்[பு] ஊர்ந்து!
  
ஈற்றுச் சீரைத் தவிர மற்றச் சீர்கள் யாவும் ஐந்து ஒற்றுகளைப் பெற்றுவந்த கூவிளங்காயாகும். காசு வாய்பாட்டில் இரண்டு ஒற்றுகளைப் பெற்று ஈற்றுச்சீர் அமையவேண்டும். இவ்வகையில் அமையும் வெண்பா 130 எழுத்துக்களைப் பெறும்.
  
விரும்பிய பொருளில் 130 எழுத்துக்களில் அமைந்த வெண்பா ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
15.10.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire