vendredi 4 octobre 2019

வெண்பா மேடை - 145


வெண்பா மேடை - 145
  
116 எழுத்துக்களில் அமைந்த நேரிசை வெண்பா!
  
எண்ணுணர்ந்தேன்! இன்னிதழ்த்தேன் தண்ணுணர்ந்தேன்! மெய்ப்புகழ்சேர்
மண்ணுணர்ந்தேன்! செய்ந்நலஞ்சேர் மாண்புணர்ந்தேன்! - விண்ணுணர்ந்தேன்!
சிந்துணர்ந்தேன்! சீர்புணர்ந்தேன்! தென்சுடர்ப்..பாப் பேர்தொடர்ந்தேன்!
செந்தமிழ்த்தாய் செம்மலர்த்தாள் சேர்ந்து!
  
ஈற்றுச் சீரைத் தவிர மற்றச் சீர்கள் யாவும் நான்கு ஒற்றுகளைப் பெற்றுவந்த கூவிளங்காயாகும். காசு வாய்பாட்டில் இரண்டு ஒற்றுகளைப் பெற்று ஈற்றுச்சீர் அமையவேண்டும். இவ்வகையில் அமையும் வெண்பா 116 எழுத்துக்களைப் பெறும்.
  
விரும்பிய பொருளில் 116 எழுத்துக்களில் அமைந்த வெண்பா ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
04.10.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire