dimanche 23 octobre 2022

கலிவிருத்தம் - 12

விருத்த மேடை - 76

 

கலிவிருத்தம் - 12

 

மா + மா + மா + மா

 

தாந்தம் பெருமை யறியார் துாது

வேந்தர்க் காய வேந்த ரூர்போல்

காந்தள் விரல்மென் கலைநன் மடவார்

கூந்தல் கமழும் கூட லுாரே!

 

[திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி, திருக்கூடலுார் - 1]

 

கலைவாழ் பிணையோ டணையும், திருநீர்

மலைவாழ் எந்தை மருவு மூர்போல்

இலைதாழ் தெங்கின் மேல்நின்[று] இளநீர்க்

குலைதாழ் கிடங்கின் கூட லுாரே!

 

[திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி, திருக்கூடலுார் - 8]

 

தன்மேல் ஊடல் கொண்டான் தன்னை

இன்னும் தவிக்க விடுதல் இனிதா?

துன்பம் நாளும் தொடரு மானால்

அன்பன் வாழ்தல் அரிதாம் என்றாள்!

 

கலைமாமணி

கவிஞர் தே. சனார்த்தனனார், புதுவை - 4

 

கரும்பின் சுவையைக் கன்னல் கனியை

அரும்பின் மணத்தை அமுதின் குணத்தை

இரும்பின் உரத்தை இயற்கை வளத்தை

விருந்தின் மகிழ்வை விளைப்பாய் தமிழே!

 

[பாட்டரசர்]

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

மா + மா + மா + மா என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
15.06.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire