mercredi 3 mars 2021

வழிமோனை வழியெதுகை வெண்பா

 


வழிமோனை வழியெதுகை வெண்பா

[பதினைந்து சீர்களும் ஓரே மோனையை ஒரே எதுகையைப் பெற்றுவர வேண்டும்]

 

கண்மாட்சி கண்ணிமையாள்! கண்ணிதரும் கண்டினியாள்! 

கண்காட்சி கண்டுமகிழ் கண்ணழகாள்! - கண்ணாட்சி

கண்சூடும் கண்ணாடிக் கண்ணமுதாள்! கண்ணனைக்

கண்பாடும் கண்ணாரக் கண்டு!

 

கண்டு - கற்கண்டு, காணுதல்

 

கருத்து:

 

கண்ணுக்கு அழகூட்டும் இமைகளை உடையவள். இசைப்பாட்டுத் தருகின்ற இனிமையைப் பெற்றவள். கண்டுகளிக்கும் கண்காட்சியைப்போல் வண்ணங்கள் கொண்ட கண்ணழகை உற்றவள். கண்ணமுதான அவள் கண்களை ஆண்டு அழகைக் கூட்டும் கண்ணாடியை அணிந்தவள். கண்ணனைக் கண்ணாரக் கண்டு பாடுகின்ற கண்களை உடையவள்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

02.03.2021

Aucun commentaire:

Enregistrer un commentaire