dimanche 21 février 2021

நாலடி ஆனந்தக் களிப்பு

 

நாலடி ஆனந்தக் களிப்பு

 

தந்தன தந்தன தானாo - oசிவன்

         தந்தது தந்தது தண்டமிழ்த் தேனாo

ஆடிய நெஞ்சத்தைக் கட்டிo - oஅதன்

         ஆணவப் போக்குறும் ஈனத்தை வெட்டிo

தேடிய பெண்ணெழில் குட்டிo - oவந்து

         தீட்டிய ஆசையைக் கூட்டியே கொட்டிo

நாடிய தீவினைச் சட்டிo - oஅதன்

         நாற்றத்தை நீக்கிட வைத்தேனே எட்டிo

பாடிய நற்பொருள் சுட்டிo - oஈசன்

         பார்வையே தீர்த்தது வாழ்வுற்ற வட்டிo!

                                                        [தந்தன]

 

பொய்யுறும் பாழகம் மாற்றிo - oமின்னும்

         பொன்னுறும் வண்ணத்தில் இன்வழி சாற்றிo

மெய்யுறும் வாழ்க்கையைப் போற்றிo - oஅன்பு

         மேலுறும் தொண்டினைச் சால்புற ஆற்றிo

நெய்யுறும் நல்லொளி ஏற்றிo - நன்றே

         நெஞ்சுறும் ஞானத்தை விஞ்சியே கூட்டிச்o

செய்யுறும் நற்பயன் சூட்டிo - oஈசன்

         சீருறும் என்னகம் பேரிசை மீட்டிo

                                                        [தந்தன]

 

எத்தனை எத்தனைத் துன்பம்o - oஎல்லாம்

         இன்றோடு நீங்கிட அன்பூறும் இன்பம்o

முத்தியை முத்தியைப் பாடும்o- oசிவ

         மூர்த்தியைப் போற்றியே கூத்தினை யாடும்o

சித்தமே முற்றுமே ஓங்கும்o -oமுன்னைச்

         செய்வினை நீங்கியே மெய்யருள் தாங்கும்o

மத்தெனச் சுற்றுமே வாழ்வுo - oசிவ

         மங்கலம் சூடினேன்! இங்கிலை தாழ்வுo

                                                        [தந்தன]

 பாட்டரசர் கி. பாரதிதாசன்
21.02.2021

Aucun commentaire:

Enregistrer un commentaire