mardi 9 mars 2021

கும்பச் சித்திரக் கவிதை

 

கும்பச் சித்திரம்

 

பாவே மணக்கப் படைத்தருள்! பசுமைக்

காவே வழங்கும் கவிகள் வேண்டும்!

வண்ண மாதே! மதுவே! புகழே!

எண்ண மினிய தளிர்கவி யே!தாயே!

விண்பனி பண்சேர்!சீர் சேர்!மாரி மார்பன்

வன்பகர் தமிழே! தேவே! வருகவே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

08.03.2021

 

 

Aucun commentaire:

Enregistrer un commentaire