samedi 9 novembre 2019

யானை ஓவியக்கவிதை



யானை ஓவியக்கவிதை
  
யானை முகத்தானை நாடு!
வஞ்சி விருத்தம்
[தேமாங்காய்+தேமா+கூவிளம்]
  
கோ..மேவு கோ..நா மேவுமே!
நே..மேவு தீவு மேவுமே!
பா..மேவு மே!கா மேவுமே!
நீ..மேவு யானை நாதனை!
  
அருங்சொற்பொருள்
  
கோ - பூமி, தலைமை, மேன்மை
மேவுதல் - அடைதல், விரும்புதல், ஓதுதல், அமர்தல், பொருந்துதல்,
நா - நாக்கு, சொல்
நே - அன்பு
தீவு - சுவை
பா - பாட்டு
கா - சோலை
யானைநாதன் - பிள்ளையார்
  
கருத்துரை
  
யானை முகத்தலைவனை அடைந்து போற்றித் தொழுதால், பூமியில் வாழும் மக்களை வாழ்விக்கும் நல்லுரை வழங்கும் தலைவனின் நாவைப் பெறலாம், அன்பை அடையலாம். சுவையை அடையலாம். பாடுகின்ற புலமையைப் அடையலாம். பாக்களில் சோலை பொருந்துமே.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
07.11.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire