குறளொளிர் வெண்பா
காத்துக் களிக்கின்றான்! காலம் சுழன்றுவரப்
பூத்துக் களிக்கின்றான்! பொற்புடையான்! - மூத்த
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்!
என்மேனி சொக்கிடுமே! இன்பக் கலைபயின்று
பொன்மேனி யாகிப் பொலிந்திடுமே! - என்றென்றும்
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள!
இன்னல் வராமல் இனிதுறவே காத்திடுவாள்!
கன்னல்மொழி கேட்டுக் களித்திடுவாள்! - மன்னுலகில்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்!
வெண்பாவில் முன்னிரண்டு அடிகளில் ஒருகுறளின் சிறு விளக்கமும் பின்னிரண்டு அடிகளில் குறட்பாவும் அமைந்திருப்பதுபோல் ஒரு வெண்பா இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.04.2017

Aucun commentaire:
Enregistrer un commentaire