mercredi 31 juillet 2019

இரத பந்தம்



தேர் ஓவியக் கவிதை
செய்யுள் 100 எழுத்து ஓவியம் 87
  
என்னாசிரியர்
பாவலர்மணி சித்தனார் தேரமர்ந்து வருகவே!
  
நேரிசை ஆசிரியப்பா
  
தேவே! கோவே! புகழ்திகழ் கவியே!
நாவே வாழ்த்தி வணங்கும்! பாட
லாக்கி யுலகை யாளுமென் குருவே!
பூக்கள் துாவி நான்புனை தேரில்
சித்தரே ஏறி வருக! சீரார்
வித்தின் மேன்மை தருக!வே யொலியே!
இன்பேறே! ஈடி லன்பே!
நன்றே யொன்றி நாளும் வாழ்கவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
31.07.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire