lundi 15 juillet 2019

வேல் பந்தம் 1


 சித்திர கவி மேடை - 4
  
வேல் சித்திர கவிதை
  
கண்கள் வேலோ? காவோ?
பண்கள் தேனோ? பாலோ?
புண்கொள் கோலோ? போரோ?
பெண்கள் மேவு பேறே!
  
இந்தக் கட்டளை வஞ்சி விருத்தத்தில் ஒவ்வோர் அடியும் எட்டு எழுத்துக்களைப் பெற்று வரும். அடிதோறும் மூன்றாம் சீரில் மோனை அமைய வேண்டும்.
  
பாடலில் ஒன்றி வரும் எழுத்துக்கள்.
[1-11] [6-22] [12-20] [16-21]
  
விரும்பிய பொருளில் "வேல் சித்திரக் கவிதை" ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் 'வேல் சித்திரக் கவிதையைப்' பதிவிட வேண்டுகிறேன்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
15.07.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire