jeudi 4 juillet 2019

கோபுர ஓவியக் கவிதை


கோபுர ஓவியக் கவிதை
  
சிந்தை வேண்டும் சீர்மிக! நாடி
விந்தை பொழிய விரிவிழி! மாபொன்
மாதே! கழையே! தாயே! பூமனத்து
மீதே மனமாழ் காவே மின்னிடக்
காண்பண்! காண்திண்! கமழ்தவத் தேனே!
காண்செம்மை தந்தமை பெருகுமே தண்தகை
வகைதரும் வண்டமிழ் மதுமழை பொழிகவே!
  
கோபுரத்தின் அடியிலிருந்து ஒவ்வொரு கட்டமாக எழுத்துக்களைக் கூட்டிப் படிக்க,பாடலின் ஈற்றடி கோபுரத்தின் தலையிலிருந்து இறங்கி வருவதைக் காணலாம்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
04.06.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire